பெங்களூரு: இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் ஜூன் மாத காலாண்டு நிதி முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐடி துறை மந்தமாக இருப்பதாக சொல்லப்படும் சூழலிலும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 8.7 சதவீதம் உயர்ந்து 6,921 கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இன்போசிஸ் நிறுவனத்தின் வருமானம் இந்த ஆண்டு முதல் காலாண்டில் 7.5% உயர்ந்து 42,279 கோடி ரூபாயாக இருக்கிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 8.7 சதவீதம் அதிகரித்து 6,921 கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது.

இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 6.2 சதவீதம் உயர்ந்து 8,803 கோடி ஆக இருக்கிறது. நிறுவனத்தின் பங்கின் Earnings per share 8.6 சதவீதமாக உயர்ந்து ஒரு பங்குக்கு 16.70 ரூபாய் என அதிகரித்திருக்கிறது. இன்போசிஸ் நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறது என்பது இந்த காலாண்டு முடிவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
மொத்தம் 3.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறதாம். இதில் 55 சதவீத ஒப்பந்தங்கள் புதிதாக இந்த நிறுவனத்திற்கு வந்தவை என இதன் தலைமை செயல் அதிகாரியான சலில் பரேக் தெரிவித்திருக்கிறார் . பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஏஐ சார்ந்த சேவைகளுக்கு இன்போசிஸை தேடி வருகின்றன என அவர் கூறியிருக்கிறார் . தற்போது இன்போசிஸ் கைவசம் 7533 கோடியை ரொக்கமாக வைத்திருக்கிறது.

இன்போசிஸ் நிறுவனம் 45,204 கோடி ரூபாய் பணத்தை முதலீடாகவும் செய்து வைத்திருக்கிறது தெரிய வருகிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக இருக்கக்கூடிய இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. மார்ச் மாத நிலவரப்படி இந்த நிறுவனத்தில் 3, 23, 578 பேர் ஊழியர்களாக இருந்தனர். ஆனால் இந்த காலாண்டில் அந்த எண்ணிக்கை 3, 23, 788 என உயர்ந்திருக்கிறது. அதாவது கடந்த காலாண்டில் நிறுவனம் புதிதாக 210 பேரை வேலைக்கு சேர்த்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இன்போசிஸ் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையில் கூடுதலாக 8,456 பேர் இணைந்துள்ளனர்.
2026ஆம் நிதியாண்டில் தன்னுடைய முதல் காலாண்டிலேயே மிக வலுவான தொடக்கத்தை இன்போசிஸ் நிறுவனம் காட்டியிருப்பதாக தெரிவித்து இருக்கும் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக், கான்ஸ்டன்ட் கரன்சி டெர்ம்ஸ் என்ற பிரிவில் தங்கள் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 0 முதல் 3 சதவீதமாக இருக்கும் என முன்பு கூறியது, அதனை 1 முதல் 3 சதவீதமாக உயர்த்துகிறோம் என தெரிவித்து இருக்கிறார். அதே வேளையில் மேக்ரோ பொருளாதாரம் சூழல்கள் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் இன்னும் அது முழுமையாக மீண்டு வரவில்லை எனக் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ரூ.40,000 போனஸ் அறிவிப்பு..!! ஆனால் ஒரு கண்டிஷன்..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications