23 ஆண்டுகளுக்கு முன்.. ரத்தன் டாடாவின் வீடியோவை வெளியிட்ட இன்போசிஸ்..!

பெங்களூர்: மக்களுக்கான தொழிலதிபர் என போற்றப்பட்ட ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக மரணமடைந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் இன்போசிஸ் நிறுவன அலுவலகத்திற்கு அவர் வருகை தந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நூறாண்டு காலத்திற்கும் மேல் தொழில் புரியக்கூடிய தொழில் குழுமம் தான் டாடா. இப்படி நூறாண்டு கால குழுமத்தின் தலைவராக பதவி வகித்து வந்த ரத்தன் டாடா தன்னுடைய 86 வயதில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி காலமானார்.

23 ஆண்டுகளுக்கு முன்.. ரத்தன் டாடாவின் வீடியோவை வெளியிட்ட இன்போசிஸ்..!

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார். இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ரத்தன் டாடா.

ரத்தன் டாடா உடனான தங்களுடைய நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இன்போசிஸ் நிறுவனம் ரத்தன் டாடா உடனான ஒரு பிரத்யேக நினைவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக செயல்படக்கூடிய இன்போசிஸ் நிறுவனம் பெங்களூரில் தன்னுடைய தலைமையகத்தை கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரில் உள்ள இன்போசிஸ் தலைமையகத்திற்கு ரத்தன் டாடா வருகை தந்திருக்கிறார். அந்த வீடியோவினை இன்போசிஸ் நிறுவனம் தங்களுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் ரத்தன் டாடா ஒரு மரக்கன்றினை நடும் காட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது அது பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது என்ற தகவலையும் இன்போசிஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவன அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வருகை தந்தாராம். அந்த காலகட்டத்தில் பெங்களூரில் நிறுவப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய ஐடி நிறுவனங்களில் இன்போசிஸ் அலுவலகமும் ஒன்று. அப்போது இன்போசிஸ் நிறுவனர்கள் ரத்தன் டாடாவை அழைத்து தங்களுடைய அலுவலகத்தை சுற்றி காட்டியுள்ளனர்.

தன்னுடைய வருகையின் நினைவாக ரத்தன் டாடா Tabebuia Rosea மரக்கன்றினை அந்த வளாகத்தில் நட்டுள்ளார். பிங்க் நிறத்தில் பூக்களை வழங்கும் இந்த மரம் தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 23 ஆண்டுகளுக்கு முன்பு இன்போசிஸ் பெங்களூர் அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வருகை தந்திருந்தார்.

அப்போது இந்த செடியினை அவர் நட்டார், தற்போது மிகப்பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது. செடி மட்டுமல்ல நம்முடைய நோக்கமும் தொலை நோக்கு பார்வையும் கூட வளர்ந்திருக்கிறது என இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வளர்ச்சி மற்றும் புதுமைகளை தொடரவும் உலகை ஒன்றாக முன்னோக்கி நகர்த்தவும் ரத்தன் டாட்டா கற்றுத் தந்த பாடங்கள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன என இன்போசிஸ் நிறுவனம் அந்த பதிவில் சுட்டிக்காட்டி உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் பக்கத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+