இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், இன்போசிஸ் அறக்கட்டளை தலைவரும், எழுத்தாளரும் பொறியாளருமான சுதா மூர்த்தி அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார்.
அதில் தான் 3000 தேவதாசிகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கையை எடுத்ததாகக் கூறினார். இது தன்னுடைய வாழ்க்கையில் பெருமைமிக்க விஷயமாக கூறினார்.

அந்த நேர்காணலில் சுதா மூர்த்தி கூறுகையில், நான் இதுவரை நீச்சல் கற்றுக் கொண்டதில்லை. இது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. இருந்தாலும் நான் பிறந்து வளர்ந்த பகுதியில் குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காது. எனவே நீச்சலை மறக்க வேண்டியது தான்.
நான் குளம் நிறைய தண்ணீரைப் பார்க்கும்போதெல்லாம் நீச்சலடிக்கும் எண்ணம் தோன்றாது, இவ்வளவு தண்ணீர் இருக்கிறதே. இது குடிப்பதற்கு பயன்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பேன்.
அதில் குதித்துக் குளிக்க வேண்டும் என்று என் மனதில் எப்போதும் தோன்றியதில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் சுதா மூர்த்தியிடம் நீங்கள் மிகவும் பெருமைப்படும் காரியம் ஏதாவது உண்டா என்று கேட்டார்.
அதற்கு சுதா மூர்த்தி பதிலளிக்கையில், நான் 3000 தேவதாசிகளைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அனைவரும் பாலியல் தொழிலாளர்கள். அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து மற்றவர்களைப் போன்று இயல்பான வாழ்க்கையை நடத்துவதற்கு உதவினேன். இதன் மூலம் எனது கடமை முடிந்ததாக நினைத்தேன். இதனால் நான் கடவுளிடம் கூறினேன்.
நான் உன் குழந்தைகளுக்கு சேவை ஆற்றிவிட்டேன். இதைத் தவிர எனது வாழ்க்கையில் எனக்கு வேறு ஆசைகள் கிடையாது என்றேன். இதுதான் எனது பெருமைக்குரிய விஷயம் என்றார். இந்த வார்த்தைகள் நிகழ்ச்சியைப் பார்த்த பார்வையாளர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
இதைத் தொடர்ந்து அந்த நெறியாளர், உங்களுக்குப் புத்தகங்கள் என்றால் பிடிக்கும் என்று தெரியும். உங்களது புத்தகத்தை வாங்குபவர்களுக்கு நீங்கள் அதில் கையெழுத்திட்டு தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
சுதா மூர்த்தி தனது வாழ்க்கையில் பல்வேறு அறச்செயல்களைச் செய்துள்ளார். நலிவடைந்தவர்களின் கல்வி மேம்பாடு, சமூக மேம்பாடு, இளம்பெண்களுக்கு வாய்ப்புகள் அளித்தல் மற்றும் மருத்துவ உதவிகள் இதில் அடங்கும்.
தனது கணவர் இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்குவதற்காக தான் சேர்த்து வைத்திருந்த அவசரகால சேமிப்பில் இருந்து ரூ.10,000ஐ முதலீட்டுக்காகக் கொடுத்து உதவினார். இதுபோன்று பல்வேறு பரோபகார நடவடிக்கைகளில் இன்றைக்கும் சுதா மூர்த்தி ஈடுபட்டு வருகிறார். Story written by: I.Jayachandran
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications