இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு அனுப்பி உள்ள மின்னஞ்சல் தான் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனத்தில் தற்போது ஹைபிரிட் வேலை முறை நடைமுறையில் இருக்கிறது. அதாவது ஊழியர்கள் ஒரு மாதத்தில் கட்டாயம் 10 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும். மீதமுள்ள நாட்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம்.

இப்படி ஹைபிரிட் முறையில் வீட்டில் இருந்து வேலை செய்ய கூடிய ஊழியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனம் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறது. அந்த மின்னஞ்சலில் வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து அறிக்கை வழங்கும் படி இன்போசிஸ் நிறுவனம் கேட்டிருக்கிறது.
அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பி உள்ள மின்னஞ்சலில் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் வேலைக்காக எவ்வளவு மின்சாரத்தை நுகர்கிறார்கள் என்பது தொடர்பான சர்வே கேள்விகள் இடம் பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கான பதில்களை பூர்த்தி செய்து அனுப்புங்கள் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருக்கிறது.
வீட்டில் இருந்து பணி செய்யும் போது பேன், லைட், ஏசி என என்னவெல்லாம் பயன்படுத்துகிறீர்கள் வீட்டில் சோலார் மின் உற்பத்தி அமைப்பு இருக்கிறதா என்பன உள்ளிட்ட கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது ஹைபிரிட் பாலிசி முறையில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு இந்த சர்வே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஹைபிரிட் முறையில் பாதி நாள் வீடு, பாதி நாள் அலுவலக வேலை என்பது நம்முடைய நிறுவன வேலை முறையில் ஒரு முக்கியமான அங்கமாக மாறிவிட்டது என கூறியிருக்கும் இன்போசிஸ் நிறுவனம், இவ்வாறு நம் வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடிய சமயத்தில் அதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கங்களை நாம் கணக்கெடுத்துக் கொள்வது நல்லது என கூறி இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனம் தங்களின் கார்பன் வெளியீட்டு அளவை குறைப்பதில் கவனமாக இருக்கிறது. 2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இன்போசிஸ் நிறுவனம் கார்பன் வெளியீட்டு அளவை பாதியாக குறைத்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் நிறுவன செயல்பாட்டுக்கு தேவையான 77% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து தயாரித்து பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் தங்களுடைய ஊழியர்களும் இதனை பின்பற்றவும் ஒட்டுமொத்தமாக கார்பன் வெளியீட்டு அளவை குறைக்கவும் இந்த மின்சார பயன்பாட்டு அறிக்கையை கேட்கிறதாம். ஊழியர்களின் பதில்களை அடிப்படையாக கொண்டு மேலும் கரியமில வாயு வெளியீட்டை எப்படி குறைப்பது என்பது குறித்து திட்டமிடப்படும் என இன்போசிஸ் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

TCS ஊழியர்களுக்கு ரூ.40,000 போனஸ் அறிவிப்பு..!! ஆனால் ஒரு கண்டிஷன்..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!



Click it and Unblock the Notifications