இந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஐடி துறை நிறுவனங்கள் பல தசாப்தங்களாக பெங்களூர், மும்பை, டெல்லி என பெரு நகரங்களின் முக்கிய பகுதிகளில் மட்டுமே இயங்கி வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக இதுவரையில் இல்லாத வேகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு செல்ல துவங்கியுள்ளது.
சமீபத்தில் இன்போசிஸ் பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி உட்பட பல இடத்தில் சிறிதும் பெரிதுமாக அலுவலகங்களை கொண்டு இருந்தாலும் வடக்கு பெங்களூரில் யெலஹங்கா பகுதியில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் இருக்கும் ஊழியர்களை அலுவலகத்திற்கு கொண்டு வர ஹைப்ரிட் மாடல் கொண்டு வரப்பட்டு உள்ளது.

யெலஹங்கா இன்போசிஸ் அலுவலகம் திங்கட்கிழமை முதல் இயங்கி வருகிறது. இதேபோல் இன்போசிஸ் சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மற்றும் விசாகப்பட்டினத்திலும் தனது புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. இன்போசிஸ் மட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அலுவலகத்தை திறந்து வருகிறது.
உதாரணமாக அயர்லாந்து நாட்டை சேர்ந்த அக்சென்சர் இதுநாள் வரையில் பெரு நகரங்களில் மட்டுமே இயங்கிய வந்த நிலையில் தற்போது கோயம்புத்தூர், ஜெய்பூரில் புதிய அலுவகத்தை திறந்துள்ளது. அமெரிக்காவின் ஐபிஎம் பெரு நகரங்களை விட்டு 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளது. Persistent Systems நிறுவனம் கோவா, நாக்பூரில் அலுவலகத்தை திறந்துள்ளது.
இந்தியாவின் பெரு நகரங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் கடந்த 2.5 வருடத்தில் புவனேஸ்வர், கொச்சி, திருவனந்தபுரம், நாக்பூர், இந்தூர், வாரணாசி, காந்திநகர் என பல நகரங்களில் அலுவலகத்தை திறந்துள்ளது. விரைவில் டிசிஎஸ் கோயம்புத்தூரில் பிரம்மாண்டமான அலுவலகத்தை திறக்கவும் தயாராகியுள்ளது.
ஐடி சேவை நிறுவனங்கள் இந்த முடிவுக்கு வர காரணம் என்ன..? கொரோனா லாக்டவுன் காலத்தில் அதிகளவிலான டெக் ஊழியர்கள் சொந்த ஊரில் செட்டிலாகியுள்ளனர். பெரு நகரங்களுக்கு வர மறுக்கும் காரணத்தாலும், பெரு நகரங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாலும், சிறு நகரங்களில் ரியல் எஸ்டேட், ஊழியர்கள் சம்பளம் குறைவு என்பதாலும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருக்கும் திறன்வாய்ந்த ஊழியர்களை நீண்ட கால அடிப்படையில் நியமிக்க ஐடி நிறுவனங்கள் சிறிய நகரங்களுக்கு படையெடுக்கிறது.
இந்த மாபெரும் மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்தாலும் ஐடி நிறுவனங்களுக்கு குறுகிய கால அடிப்படையில் அதிகப்படியான செலவுகளை ஈர்க்கும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் பல வகையில் நன்மை உள்ளது. இதேபோல் இந்த முக்கிய மாற்றத்திற்கான அடிப்படை காரணம் WORK FROM HOME.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications