இந்தியாவின் பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான நாராயணமூர்த்தி இன்று வரையில் தனது ஊழியர்களை வாரம் 70 மணிநேரம் பணியாற்றச் செய்யச் சொல்வது சரி என நம்பும் அவர், 2015 மிகப்பெரிய வாய்ப்பை இழந்துள்ளது யாருக்கெல்லாம் தெரியும். இது மட்டும் நடந்திருந்தால் இன்போசிஸ்-ன் இன்றைய சந்தை மதிப்பில் கூடுதலாக 10 பில்லியன் டாலர் சேர்ந்திருக்கும் என்பது தெரியுமா..?
2015 ஆம் ஆண்டு, அப்போதைய இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், பெரிதும் மதிக்கப்பட்ட CEO-க்களின் ஒருவரான விஷால் சிக்கா, பலரும் அறியப்படாத நிறுவனமான OpenAI-ல் பெரும் முதலீடு செய்யத் தயாராக இருந்தார். OPENAI நிறுவனம் ChatGPT உள்ளிட்ட பல புரட்சிகரமான AI தொழில்நுட்பங்களை உருவாக்கப் போகிறது என்பதை அவர் உணர்ந்து இந்த முடிவை எடுத்தார்.

ஆனால் திடீரென்று, விஷால் சிக்கா இன்ஃபோசிஸில் இருந்து நீக்கப்பட்டார். நாராயண மூர்த்தி மற்றும் நந்தன் நீலகனி ஆகியோர் விஷால் சிக்கா-வின் OPENAI முதலீட்டு முடிவை எதிர்த்தனர். அவர்கள் OpenAI நிறுவனத்தின் திறனைச் சரியாக மதிப்பிட தவறிவிட்டனர். இதனால் மாபெரும் வளர்ச்சி வாய்ப்பை இழந்துள்ளது.
இதற்காக விஷால் சிக்கா சாம் ஆல்ட்மேன், அப்போது நிர்வாக குழுவில் இருந்த எலான் மஸ்க், ரெய்லடு ஹாப்மேன், பீட்டர் தீயல், அமேசான் வெப் சர்வீசஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இன்போசிஸ் நிர்வாகத்தின் வாயிலாக 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் பின்னாளில் இது நடக்காமல் போனது.
அதற்குப் பதிலாக, இன்போசிஸ் தனது ஆஸ்தான வர்த்தகத்தில் கவனம் செலுத்துவதற்காகவும், பேக் என்ட் ஆப்ரேஷன்ஸ் வர்த்தகத்திற்காகவும் விஷால் சிக்காவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு சலில் பாரிக்-ஐ நியமித்தது. இதன் மூலம், இந்திய நிறுவனம் AI துறையில் முன்னோடியாக இருக்கும் வாய்ப்பை இழந்துள்ளது அதோடு பல பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டையும் இழந்துள்ளது.
ஆனால் விஷால் சிக்கா முயற்சி செய்த இதே காலகட்டத்தில் மைக்ரோசாப்டின் சத்யா நாடெல்லா முயற்சி செய்து OpenAI-யில் முதலீடு செய்தார். இதன் மூலம் ஏஐ துறையை தற்போது மைக்ரோசாப்ட் மறைமுகமாக ஆட்சி செய்து வருகிறது.
இவ்வளவு பெரிய வாய்ப்பை இழந்த இன்போசிஸ், தற்போது நாராணமூர்த்தி இன்னும் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்வதே மிகவும் மதிப்புமிக்க செயலாக நம்புகிறார். விஷால் சிக்கா தொடர்ந்து இருந்திருந்தால், அவர் குறைந்தது 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கலாம். இன்று அந்த பங்கு மட்டும் பல பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாக இருந்திருக்கும் என்பது டெக் வல்லுனர்களின் கருத்து.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications