பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொச்சியில் இந்தியாவின் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை தொடங்கி வைத்தார்.
பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் பிரம்மாண்டமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 18 மாடிகள், 16 மருத்துவமனைகள், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் சப்பாத்திகள் செய்யும் அளவுக்கு பிரம்மாண்டமான சமையலறை ஆகியவை உள்ளன.
விலை
கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் உள்நாட்டிலேயே ரூ.23000 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பாதுகாப்பு துறையில் தன்னிறைவை நோக்கிய மத்திய அரசின் குறிப்பிடத்தக்க சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கடின உழைப்பு
இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பேசியபோது, 'இன்று, கேரளாவின் கடற்கரையில், ஒவ்வொரு இந்தியனும் ஒரு புதிய எதிர்காலத்தின் சூரிய உதயத்தை காண்கிறார். ஐஎன்எஸ் விக்ராந்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இந்தியாவின் எழுச்சி உணர்வுகளுக்கு ஒரு எடுத்துகாட்டு. விக்ராந்த் ஒரு போர்க்கப்பல் மட்டுமல்ல. 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று' என்று கூறினார்.
போர்க்கப்பல்
இந்திய கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தில் (WDB) வடிவமைக்கப்பட்ட இந்த ஐஎன்எஸ் விக்ராந்த், கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்தியாவின் கப்பல் கட்டும் வரலாற்றில் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பாதுகாப்பு
ஐஎன்எஸ் விக்ராந்த், பெரிய தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட MSMEகளை உள்ளடக்கிய பெரிய அளவிலான உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்ராந்த் இயக்கப்படுவதன் மூலம், இந்தியாவில் இரண்டு செயல்பாட்டு விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கும் என்பதும் இது நாட்டின் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
262 மீட்டர் நீளம்
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் இந்திய கடற்படையின் கூற்றுப்படி, 262 மீட்டர் நீளம் கொண்டது. மேலும் இது 45,000 டன்களை சுமக்கும் திறன் கொண்டது. மேலும் விக்ராந்த் 14 தளங்களைக் கொண்டுள்ளது. இந்த கப்பலில் சுமார் 1,500 வீரர்களை ஏற்றிச் செல்ல முடியும். கப்பலின் சமையலறையில் சுமார் 10,000 சப்பாத்திகள் அல்லது ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
எரிவாயு விசையாழி
இந்த கப்பல் நான்கு எரிவாயு விசையாழிகளால் இயக்கப்படுகிறது. மொத்தம் 88 மெகாவாட் சக்தி மற்றும் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் ஆகும். சுமார் 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த போர்க்கப்பலில் 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 250 டேங்கர் எரிபொருள் மற்றும் 2,400 பெட்டிகள் உள்ளன.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications