இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின், இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் திருமண விழாவில் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விருந்தினர்களின் நுழைவை கட்டுப்படுத்த QR கோட் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. திருமணத்தில் இன்னும் வேறு என்னென்ன சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தது என்பது குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஜூலை 12-ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த திருமண விழாவில், பிரபல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 13-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திருமணம் நடைபெற்றது. ஜூலை 14-ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஊழியர்கள் மற்றும் பிசினஸ் பார்ட்னர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: திருமண விழா அரங்கத்திற்குள் நுழைவதற்கு விருந்தினர்களின் மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்ட QR குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி உள்ளே நுழைவதற்கு கையில் அணிந்துகொள்ள பேண்டும் வழங்கப்பட்டது. அவசர கால சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு வழிமுறைகள் மற்றும் மருத்துவ வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன.
விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள்: திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் பல்வேறு வடிவமைப்புகளில் வழங்கப்பட்டன. அவற்றுள் சிறப்பு அம்சமாக, வெள்ளி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சிறு கோவில் போன்ற அமைப்பில் வழங்கப்பட்ட பத்திரிகை தான்.
திருமணத்தின் வெவ்வேறு நிகழ்வுகளுக்கான தனித்தனி அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களில் "AR" என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட துணி, நீல நிற ஷால் மற்றும் வெள்ளிப் பெட்டி போன்றவை அடங்கும்.
மேலும் விருந்தினர்கள் உள் நுழைவதற்கு கூகுள் படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது. அதன் பின் படிவத்தை நிரப்பிய அனைவருக்கும் ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளனர். அந்த மெசேஜ்ஜில் நிகழ்ச்சிக்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக உங்களுக்கு QR குறியீடுகள் அனுப்பப்படும் என்று எழுதியிருந்தது. இந்த QR குறியீடுகளை பயன்படுத்தி தான் பல பிரபலங்களும் உள் நுழையும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர்.
இந்த QR குறியீடுகள், மெயில் வழியாக பிரபலங்களுக்கு அனுப்பப்பட்டன. அனுமதி வழங்கப்படும் நுழைவாயிலில் இந்த QR குறியீடுகள் ஸ்கேன் செய்யப்பட்டது. ஒவ்வொரு விருந்தினரும் தங்கள் மணிக்கட்டில் ஒரு பேண்டை அணிந்துகொள்ள வேண்டும்.
திருமண நாளில், சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தலைவர் லீ ஜே-யோங் மற்றும் அவரது மனைவி ஆகியோர், திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிபர்கள், திருமண விழாவின் போது பிங்க் நிற பேண்டை அணிந்திருந்தனர்.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் உள்ள அவர்களது இல்லமான ஆண்டிலியாவில், தங்கள் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு திருமண விழாவைத் தொடங்கினர்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இருந்தது. பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஷாருக்கான், சல்மான் கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் கிம் கர்தாஷியன் மற்றும் WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications