ரிசர்வ் வங்கியில் பதிவு செய்த வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் மட்டுமே கடன்பெற வேண்டும். அடையாளம் தெரியாதவர்களிடம் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டாம் என RBI எச்சரித்துள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கூறி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இணையம் வழியாக கடன்
இன்றைய காலகட்டத்தில், இணையதளம் மற்றும் மொபைல் ஆப்கள் வழியாகப் பல்வேறு நிறுவனங்கள் பொதுமக்களுக்குக் கடன்கள் வழங்குகின்றன. இதில் வேடிக்கை என்னவெனில் கடன் வாங்குபவர், கடன் தருபவரை நேரில் பார்க்காமலே இந்த மொபைல் ஆப்கள் மற்றும் இணையதளங்கள், கடன் கேட்பவரின் பான் கார்டு எண், ஆதார் எண்ணை வாங்கி அதன் மூலமாகக் கடன் கேட்பவரின் கடந்த கால சிபில் ஸ்கோர்களை கண்காணித்து கடன் வழங்குகின்றன.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
முதலில் குறைந்த தொகையைக் கடனாக கேட்பவரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கின்றன. ஆனால் அதனைத் தவணை முறையில் செலுத்திய பின், திருப்பிச் செலுத்தும் முறையை வைத்து அதிக கடன் தொகையை வழங்குகின்றன. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியோ, ஆப் மூலமாகக் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.
அதிக கட்டணம்
குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாகக் கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன்பெற வேண்டாம். ஆப் மூலமாக சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுகக் கட்டணம் எனக் கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாகப் புகார்கள் வந்துள்ளன. மேலும், கடனை வசூலிக்கவும் ஆப் நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளைப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
புகார் அளிக்கலாம்
அப்படி அதிக வட்டி, மறைமுகக் கட்டணத்துடன் கடன் வழங்கும் ஆப்கள் குறித்து உடனடியாகக் காவல்துறையில் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் (https://cms.rbi.org.in/cms/IndexPage.aspx?aspxerrorpath=/cms/cms/indexpage.aspx) பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளது.
More From GoodReturns

மினிமம் பேலன்ஸ் அபராதங்களுக்கு முடிவு கட்டுமா மத்திய அரசு? நாடாளுமன்றத்தில் எதிரொலித்த பிரச்சினை

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications