இந்திய இன்சூரன்ஸ் சந்தை வர்த்தகம் வளர்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகளும், ஆதாரங்களும் இருக்கும் நிலையில் எல்ஐசி ஐபிஓ தோல்வி போன்ற சில தடுமாற்றங்களும் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இன்சூரன்ஸ் சந்தையையும், வர்த்தகத்தையும் வலிமைப்படுத்தும் விதமாக முக்கியமான திட்டத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் முன் வைக்கப்பட்டு உள்ளது.
இன்சூரன்ஸ்
இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்கவும், இன்சூரன்ஸ் திட்டத்திற்கான ப்ரீமியத்தை நீண்ட கால அடிப்படையில் செலுத்தவும் ரீடைல் மற்றும் கார்பரேட் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கும் திட்டம் தற்போது இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் முன் வைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இல்லை
இத்தகைய திட்டம் இதுவரையில் இந்தியாவில் இல்லை என்றாலும் பல உலக நாடுகளில் இத்தகைய திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் பெயர் ப்ரீமியம் பைனான்சிங் இன்சூரன்ஸ் பார்லேன்ஸ் ஆகும். இத்திட்டம் ஒப்புதல் பெற்றால் இச்சேவைக்குப் புதிய தளத்தை உருவாக்க வேண்டி வரும்.
நன்மை
இத்திட்டம் மூலம் இந்தியாவில் இன்சூரன்ஸ் வர்த்தகம் அதிகரிப்பு, இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் தக்கவைப்பு, பாதுகாப்பில் இருக்கும் இடைவெளி குறைப்பு ஆகிய பலன்கள் கிடைக்கும். இதேபோல் கன்ஸ்யூமர் மற்றும் கார்பரேட் நிதி சேவை பிரிவில் புதிய வர்த்தகம் உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் என இன்சூரன்ஸ் துறைத் தலைவர்கள் கூறுகின்றனர்.
10 பைசா செலவு இல்லை
இந்த ப்ரீமியம் பைனான்சிங் சேவைக்கு, ப்ரோக்கர் அல்லது இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு முறை மொத்தமாகச் செலுத்தப்படும் ப்ரீமியம் தொகையை நீண்ட கால அடிப்படையில் ப்ரீமியம் செலுத்தும் சலுகையை வழங்கி, அதற்கான கடனையும் அளிக்கும். இதன் படி நிதி சேவை (கடன்) அளிக்கும் நிறுவனம் நேரடியாக ப்ரீமியம் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கும் வாடிக்கையாளர் இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெறுவர்.
கடனுக்கான ஈஎம்ஐ
இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் (மக்கள்) ப்ரீமியம் தொகைக்குப் பதிலாகக் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த வேண்டும். இதேபோல் இத்தகைய திட்டத்திற்கான கடன் எவ்வளவு என்பது இதுவரை தெரியவில்லை என்பதோடு இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் கடனுக்கான வட்டியும் செலுத்த வேண்டும் என்பது சுமை தான்.
pro-rata அடிப்படை
மேலும் இன்சூரன்ஸ் திட்டத்தைக் கடன் திட்டம் மூலம் வாங்கி, பாதியிலேயே நிறுத்திக் கொண்டால் இன்சூரன்ஸ் நிறுவனம் pro-rata அடிப்படையில் பணத்தைக் கடன் கொடுத்த நிறுவனத்திற்கு அளித்துவிட்டு மீதமுள்ள தொகையை மட்டுமே வாடிக்கையாளர் பெற முடியும் என மற்றொரு இன்சூரன்ஸ் துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க.. மறக்காம கமெண்ட் பண்ணுங்க..
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications