இந்திய இன்சூரன்ஸ் சந்தை வர்த்தகம் வளர்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகளும், ஆதாரங்களும் இருக்கும் நிலையில் எல்ஐசி ஐபிஓ தோல்வி போன்ற சில தடுமாற்றங்களும் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இன்சூரன்ஸ் சந்தையையும், வர்த்தகத்தையும் வலிமைப்படுத்தும் விதமாக முக்கியமான திட்டத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் முன் வைக்கப்பட்டு உள்ளது.
இன்சூரன்ஸ்
இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்கவும், இன்சூரன்ஸ் திட்டத்திற்கான ப்ரீமியத்தை நீண்ட கால அடிப்படையில் செலுத்தவும் ரீடைல் மற்றும் கார்பரேட் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கும் திட்டம் தற்போது இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் முன் வைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இல்லை
இத்தகைய திட்டம் இதுவரையில் இந்தியாவில் இல்லை என்றாலும் பல உலக நாடுகளில் இத்தகைய திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் பெயர் ப்ரீமியம் பைனான்சிங் இன்சூரன்ஸ் பார்லேன்ஸ் ஆகும். இத்திட்டம் ஒப்புதல் பெற்றால் இச்சேவைக்குப் புதிய தளத்தை உருவாக்க வேண்டி வரும்.
நன்மை
இத்திட்டம் மூலம் இந்தியாவில் இன்சூரன்ஸ் வர்த்தகம் அதிகரிப்பு, இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் தக்கவைப்பு, பாதுகாப்பில் இருக்கும் இடைவெளி குறைப்பு ஆகிய பலன்கள் கிடைக்கும். இதேபோல் கன்ஸ்யூமர் மற்றும் கார்பரேட் நிதி சேவை பிரிவில் புதிய வர்த்தகம் உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் என இன்சூரன்ஸ் துறைத் தலைவர்கள் கூறுகின்றனர்.
10 பைசா செலவு இல்லை
இந்த ப்ரீமியம் பைனான்சிங் சேவைக்கு, ப்ரோக்கர் அல்லது இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு முறை மொத்தமாகச் செலுத்தப்படும் ப்ரீமியம் தொகையை நீண்ட கால அடிப்படையில் ப்ரீமியம் செலுத்தும் சலுகையை வழங்கி, அதற்கான கடனையும் அளிக்கும். இதன் படி நிதி சேவை (கடன்) அளிக்கும் நிறுவனம் நேரடியாக ப்ரீமியம் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கும் வாடிக்கையாளர் இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெறுவர்.
கடனுக்கான ஈஎம்ஐ
இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் (மக்கள்) ப்ரீமியம் தொகைக்குப் பதிலாகக் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த வேண்டும். இதேபோல் இத்தகைய திட்டத்திற்கான கடன் எவ்வளவு என்பது இதுவரை தெரியவில்லை என்பதோடு இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் கடனுக்கான வட்டியும் செலுத்த வேண்டும் என்பது சுமை தான்.
pro-rata அடிப்படை
மேலும் இன்சூரன்ஸ் திட்டத்தைக் கடன் திட்டம் மூலம் வாங்கி, பாதியிலேயே நிறுத்திக் கொண்டால் இன்சூரன்ஸ் நிறுவனம் pro-rata அடிப்படையில் பணத்தைக் கடன் கொடுத்த நிறுவனத்திற்கு அளித்துவிட்டு மீதமுள்ள தொகையை மட்டுமே வாடிக்கையாளர் பெற முடியும் என மற்றொரு இன்சூரன்ஸ் துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க.. மறக்காம கமெண்ட் பண்ணுங்க..
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications