உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்து அதன் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஏற்கனவே சிப் தயாரிப்பு மற்றும் அதன் விலை அளவில் பெரும் பாதிப்பு இருக்கும் வேளையில் இன்டெல் நிறுவனத்தின் கணிப்பில் பெரும் அச்சத்தைச் சிப் தயாரிப்புச் சந்தையில் உருவாக்கியுள்ளது.
இன்டெல் நிறுவனத்தின் கணிப்பு யாருக்கெல்லாம் பாதிப்பு. ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் அளவுக்குச் சரியும் வகையில் என்ன நடந்தது.
ரெசிஷன் பாதிப்பு
உலகளவில் நிலவும் ரெசிஷன் பாதிப்பு மூலம் கம்ப்யூட்டர் விற்பனை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இன்டெல் நிறுவனம் நஷ்டம் அடையும் என்றும், வருவாய் 3 பில்லியன் டாலர் வரையில் சரியும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
டேட்டா சென்டர்
இதற்கு முக்கியக் காரணமாக உலகளவில் டேட்டா சென்டர் வர்த்தகத்தில் ஏற்பட்டு உள்ள மந்தமான வளர்ச்சியை காட்டுகிறது இன்டெல்.
இன்டெல் நிறுவன பங்குகள்
இதன் எதிரொலியாக அமெரிக்கச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள இன்டெல் நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 6.4 சதவீதம் வரையில் குறைந்து 8 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
இதேபோல் இன்டெல் நிறுவனத்தின் முக்கியமான சப்ளையரான KLA கார்ப் பங்குகளும் நேற்று 6.9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
போட்டி நிறுவனங்கள்
ஆனால் இன்டெல் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான AMD, Nvidia நிறுவன பங்குகள் உயர்வுடனே உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இன்டெல் நிறுவனத்தின் வர்த்தகத்தை இவ்விரு நிறுவனங்களும் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
இன்டெல் 8 பில்லியன் டாலர் இழப்பு
இன்டெல் நிறுவனத்தின் வரலாறு காணாத 8 பில்லியன் டாலர் வீழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை என Rosenblatt Securities சேர்த்த பங்கு சந்தை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிஇஓ
இன்டெல் கம்ப்யூட்டர் சிப் சந்தையில் தான் இழக்கும் வர்த்தகத்தைத் திரும்பப் பெற்று மீண்டும் ஆதிக்க நிலையை அடைய கான்டிராக்ட் உற்பத்தியாளர்கள் விரிவாக்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிய தொழிற்சாலை அமைக்க இன்டெல் சிஇஓ Patrick P. Gelsinger முயற்சியில் செய்தாலும், இதில் பலன் அளிக்காமலும், நடைமுறைக்கு வருவதிலும் இருக்கும் பிரச்சனையை மார்ச் காலாண்டில் கணிப்புகள் காட்டுகிறது.
TSMC நிறுவனம்
இன்டெல் நிறுவனத்தின் சக போட்ட நிறுவனமான AMD தனது உற்பத்தியைத் தென் கொரியாவின் TSMC நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இதனால் உற்பத்தி அளவுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து பெரும் தாக்கத்தைக் கம்ப்யூட்டர் சிப் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications