உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்து அதன் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஏற்கனவே சிப் தயாரிப்பு மற்றும் அதன் விலை அளவில் பெரும் பாதிப்பு இருக்கும் வேளையில் இன்டெல் நிறுவனத்தின் கணிப்பில் பெரும் அச்சத்தைச் சிப் தயாரிப்புச் சந்தையில் உருவாக்கியுள்ளது.
இன்டெல் நிறுவனத்தின் கணிப்பு யாருக்கெல்லாம் பாதிப்பு. ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் அளவுக்குச் சரியும் வகையில் என்ன நடந்தது.
ரெசிஷன் பாதிப்பு
உலகளவில் நிலவும் ரெசிஷன் பாதிப்பு மூலம் கம்ப்யூட்டர் விற்பனை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இன்டெல் நிறுவனம் நஷ்டம் அடையும் என்றும், வருவாய் 3 பில்லியன் டாலர் வரையில் சரியும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
டேட்டா சென்டர்
இதற்கு முக்கியக் காரணமாக உலகளவில் டேட்டா சென்டர் வர்த்தகத்தில் ஏற்பட்டு உள்ள மந்தமான வளர்ச்சியை காட்டுகிறது இன்டெல்.
இன்டெல் நிறுவன பங்குகள்
இதன் எதிரொலியாக அமெரிக்கச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள இன்டெல் நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 6.4 சதவீதம் வரையில் குறைந்து 8 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
இதேபோல் இன்டெல் நிறுவனத்தின் முக்கியமான சப்ளையரான KLA கார்ப் பங்குகளும் நேற்று 6.9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
போட்டி நிறுவனங்கள்
ஆனால் இன்டெல் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான AMD, Nvidia நிறுவன பங்குகள் உயர்வுடனே உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இன்டெல் நிறுவனத்தின் வர்த்தகத்தை இவ்விரு நிறுவனங்களும் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
இன்டெல் 8 பில்லியன் டாலர் இழப்பு
இன்டெல் நிறுவனத்தின் வரலாறு காணாத 8 பில்லியன் டாலர் வீழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை என Rosenblatt Securities சேர்த்த பங்கு சந்தை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிஇஓ
இன்டெல் கம்ப்யூட்டர் சிப் சந்தையில் தான் இழக்கும் வர்த்தகத்தைத் திரும்பப் பெற்று மீண்டும் ஆதிக்க நிலையை அடைய கான்டிராக்ட் உற்பத்தியாளர்கள் விரிவாக்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிய தொழிற்சாலை அமைக்க இன்டெல் சிஇஓ Patrick P. Gelsinger முயற்சியில் செய்தாலும், இதில் பலன் அளிக்காமலும், நடைமுறைக்கு வருவதிலும் இருக்கும் பிரச்சனையை மார்ச் காலாண்டில் கணிப்புகள் காட்டுகிறது.
TSMC நிறுவனம்
இன்டெல் நிறுவனத்தின் சக போட்ட நிறுவனமான AMD தனது உற்பத்தியைத் தென் கொரியாவின் TSMC நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இதனால் உற்பத்தி அளவுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து பெரும் தாக்கத்தைக் கம்ப்யூட்டர் சிப் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications