கூகுளை தொடர்ந்து இன்டெல் நிறுவனமும் தங்களுடைய ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிவதற்கு அனுமதி தந்தன. பெருந்தொற்று முடிவு பெற்று இயல்பு நிலை திரும்பியதை அடுத்து கூகுள் , அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து தான் பணிபுரிய வேண்டும் என அறிவித்துள்ளன.
கூகுள் நிறுவனத்தை பொறுத்தவரை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து தங்களுடைய ஊழியர்கள் கட்டாயம் வாரத்தில் நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது. இந்த உத்தரவை பின்பற்றாத ஊழியர்கள் வேறு நிறுவனத்தை பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த இன்டெல் நிறுவனமும் இனி தங்கள் நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இன்டெல் நிறுவனம், தங்கள் நிறுவன ஊழியர்கள் சுமார் 20% பேரை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. கடந்த ஆண்டு தான் இந்த நிறுவனம் 15,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. நடப்பாண்டில் 20% பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சூழலில் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து தான் பணிபுரிய வேண்டும் என்று அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இன்டெல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் இன்டெல் நிறுவனம் அதற்கேற்ற சிப்களை உற்பத்தி செய்ய முடியாமல் பின்தங்கி இருக்கிறது. கடந்த மாதம் தான் தலைமை செயல் அதிகாரியாக லிப் பூ டான் நியமனம் செய்யப்பட்டார். அவர் பதவி ஏற்றது முதலே நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார்.
நிறுவனத்தின் மேலாண்மை பிரிவையே இவர் மறுக்கட்டமைப்பு செய்திருக்கிறார். பணிநீக்க நடவடிக்கை , ஊழியர்களின் பொறுப்புகளில் மாற்றம் என பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்நிலையில் தான் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணி புரிய வேண்டும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இதுநாள் வரை இன்டெல் ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம் என சலுகை வழங்கப்பட்டது.
தற்போது வாரத்தில் 4 நாட்கள் அலுவலகம் வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது செப்டம்பர் மாதம் முதல் அது அமலுக்கு வர இருக்கிறது. ஊழியர்கள் குழுவாக அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் போது நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பதாகவும், நிறுவனத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல இது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications