அமெரிக்காவை சேர்ந்த பிரபல சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் (Intel) தங்கள் ஊழியர்களில் 15% முதல் 20% பேரை ஜூலை மாதம் பணியில் இருந்து நீக்கவுள்ளது. இன்டெல் நிறுவன செயல்பாடுகளை புதிய தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டான் மறுக்கட்டமைப்பு செய்யவுள்ளார். இதன் ஒருபகுதியாக 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இன்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
நடப்பாண்டின் முதல் காலாண்டில் இன்டெல் நிறுவனம் 12.7 பில்லியன் டாலர் வருவாயில், 800 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது என்று லிப்-பு டான் தெரிவித்துள்ளார். அதேசமயம், கடந்தாண்டு 18.8 பில்லியன் டாலர் இழப்பை இன்டெல் சந்தித்துள்ளது. இதன் காரணமாக கடந்தாண்டு கூட சுமார் 15,000 ஊழியர்களை பணியில் இருந்து இன்டெல் நிறுவனம் நீக்கம் செய்திருந்தது. பணியாளர் குறைப்பு சதவீதம் குறித்து இன்டெல் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், மாற்றத்தின் போது ஊழியர்கள் "கவனத்துடனும், மரியாதையுடனும்" நடத்தப்படுவார்கள் என்று அந்நிறுவனம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு காலகட்டத்தில் இந்நிறுவனம் உலகின் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கணினி சிப் வடிவமைப்பு நிறுவனமாக இருந்தது. ஆனால், சமீப ஆண்டுகளாக கடும் நஷ்டத்தை இந்நிறுவனம் சந்தித்து வருகிறது. (Nvidia) என்விடியா, தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (TSMC) மற்றும் அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் (AMD) போன்ற தொழில்துறை போட்டியாளர்களுடன் இன்டெல் போட்டியிட போராடி வருகிறது.
சீனாவுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வரும் இந்த சூழலில் இன்டெல் நிறுவனத்தின் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது சிப்களுக்கு வரி விலக்கு அளித்துள்ள நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குறைக்கடத்திகள் 85% வரிகளை எதிர்கொள்ளும் என்று சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள சிப்களை ஒவ்வொரு ஆண்டும் சீனா இறக்குமதி செய்து வருகிறது.
இவற்றில் சுமார் 8 பில்லியன் டாலர் அமெரிக்காவில் இன்டெல்லால் அசெம்பிள் செய்யப்பட்ட சிபியூக்கள் (CPU) ஆகும். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் குறைக்கடத்தி மீதான பழிவாங்கும் வரிகளை சீனா திரும்பப் பெற்றதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய முன்னேற்றங்கள் இன்டெல் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளன. இன்டெல் நிறுவனத்தின் அதிர்ஷ்டத்தைத் திருப்புவதற்கான சிறந்த நம்பிக்கை TSMC உடனான ஒத்துழைப்பாகத் தெரிகிறது. இன்டெல்லின் சிப் தயாரிப்பு தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க ஒரு கூட்டு முயற்சியை இரு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.
அதேபோல், வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் இன்டெல் சற்று பின்தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக, செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் இது முயல்கிறது. 2025ஆம் ஆண்டில் தொழில்நுட்பத் துறையின் பரவலான சரிவின் பின்னணியில் இன்டெல் நிறுவனத்தின் பணிநீக்கங்களும் வருகின்றன. பணிநீக்க கண்காணிப்பு தளமான Layoffs.fyi இன் படி, இந்தாண்டு மட்டும் இதுவரை 62,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் மற்றும் மெட்டா உள்ளிட்ட தொழில்நுட்பத் தலைவர்கள் புதிய வணிக மறுசீரமைப்பு மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப சமீபத்திய மாதங்களில் குறிப்பிடத்தக்க குறைப்புகளை அறிவித்துள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications