டெல்லி: இந்தியா உலகளவில் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் கேஸ் நுகர்வில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாகும். அதிலும் தனது மொத்த தேவையில் சுமார் 80% இறக்குமதி செய்து உபயோகித்து வருகிறது.
ஆனால் தற்போது உலகளவில் சுமார் 199 நாடுகளில் கொரோனா காரணமாக பல நெருக்கடிகள் நிலவி வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் போதிய இருப்பு இருப்பதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளார்.
இருப்பு உள்ளது
இந்தியாவில் தற்போது கொரோனா தாக்கம் காரணமாக 21 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளன அத்தியாவசியம் தவிர பல வணிகங்களும் முற்றிலும் முடங்கியுள்ளன. எனினும் முக்கிய எரிபொருள்களான பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு போதிய அளவிலான இருப்பு உள்ளது. இதனால் மக்கள் பயப்பட வேண்டும் என்றும் ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.
போதுமான சுத்திகரிப்பு நிலையங்கள்
ஏப்ரல் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திலும் எரிபொருள் தேவையை மதிப்பிட்டுள்ளோம். ஆக நமது எல்லோரின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான அளவுக்கு சுத்திகரிப்பு நிலையங்கள் நம்மிடம் உள்ளன. இது தவிர நமது அனைத்து எரிபொரூள் சேமிப்பு நிலையங்களிலும் போதுமான இருப்பு உள்ளது. இதனால் எந்தவொரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இருக்காது என்றும் பிடிஐக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தேவை குறைந்துள்ளது
.இந்தியாவில் 21 நாள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் ரோட்டில் செல்வது குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல் தேவை 8% குறைந்துள்ளது. இதே டீசல் தேவை 16% குறைந்துள்ளது. இதே ஏடிஎஃப் தேவையும் குறைந்துள்ளது. எனினும் எல்பிஜி நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சேவை செய்து வருகிறோம் என்றும் ஐஓசி தலைவர் கூறியுள்ளார்.
ரீபில் தேவை அதிகரித்துள்ளது
அதிலும் மக்கள் வீட்டிலேயே மக்கள் முடங்கியுள்ள நிலையில், ரீபில் தேவை 200% அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு ரீபில்லுக்காக கோரப்பட்ட முன்பதிவானது பெரும்பாலும் கொரோனா பீதியின் காரணமாக அதிகளவு பதிவு செய்துள்ளனர். எனினும் பலருக்கு புதியதாக சிலிண்டர் வழங்க முடியவில்லை. இருப்பினும் மக்கள் யாரும் பீதியடையவில்லை. போதுமான இருப்பு உள்ளது என்றும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications