டெல்லி: இந்தியா உலகளவில் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் கேஸ் நுகர்வில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாகும். அதிலும் தனது மொத்த தேவையில் சுமார் 80% இறக்குமதி செய்து உபயோகித்து வருகிறது.
ஆனால் தற்போது உலகளவில் சுமார் 199 நாடுகளில் கொரோனா காரணமாக பல நெருக்கடிகள் நிலவி வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் போதிய இருப்பு இருப்பதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளார்.
இருப்பு உள்ளது
இந்தியாவில் தற்போது கொரோனா தாக்கம் காரணமாக 21 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளன அத்தியாவசியம் தவிர பல வணிகங்களும் முற்றிலும் முடங்கியுள்ளன. எனினும் முக்கிய எரிபொருள்களான பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு போதிய அளவிலான இருப்பு உள்ளது. இதனால் மக்கள் பயப்பட வேண்டும் என்றும் ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.
போதுமான சுத்திகரிப்பு நிலையங்கள்
ஏப்ரல் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திலும் எரிபொருள் தேவையை மதிப்பிட்டுள்ளோம். ஆக நமது எல்லோரின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான அளவுக்கு சுத்திகரிப்பு நிலையங்கள் நம்மிடம் உள்ளன. இது தவிர நமது அனைத்து எரிபொரூள் சேமிப்பு நிலையங்களிலும் போதுமான இருப்பு உள்ளது. இதனால் எந்தவொரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இருக்காது என்றும் பிடிஐக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தேவை குறைந்துள்ளது
.இந்தியாவில் 21 நாள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் ரோட்டில் செல்வது குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல் தேவை 8% குறைந்துள்ளது. இதே டீசல் தேவை 16% குறைந்துள்ளது. இதே ஏடிஎஃப் தேவையும் குறைந்துள்ளது. எனினும் எல்பிஜி நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சேவை செய்து வருகிறோம் என்றும் ஐஓசி தலைவர் கூறியுள்ளார்.
ரீபில் தேவை அதிகரித்துள்ளது
அதிலும் மக்கள் வீட்டிலேயே மக்கள் முடங்கியுள்ள நிலையில், ரீபில் தேவை 200% அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு ரீபில்லுக்காக கோரப்பட்ட முன்பதிவானது பெரும்பாலும் கொரோனா பீதியின் காரணமாக அதிகளவு பதிவு செய்துள்ளனர். எனினும் பலருக்கு புதியதாக சிலிண்டர் வழங்க முடியவில்லை. இருப்பினும் மக்கள் யாரும் பீதியடையவில்லை. போதுமான இருப்பு உள்ளது என்றும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications