ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்சல் போன்ற உயர் ரக ஸ்மார்ட்போன்களை வாங்குவது இனி எளிதாகும். ஏனெனில் மத்திய அரசு மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் நுகர்வோருக்கு பயன் அளிப்பதுடன், இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக மாற்றுவதே இதன் நோக்கம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மொபைல் போன்கள், பிரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி (பிசிபிஏ) மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் எனக் கூறினார்.

இந்த மாற்றம் ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஆப்பிள் நிறுவனம், உள்ளூர் உற்பத்தியை அதிகரித்திருந்தாலும், இன்னும் ஒரு பகுதியளவு ஸ்மார்ட்போன்களை இந்தியாவுக்கு இன்னமும் இறக்குமதி செய்து தான் வருகிறது.
கிட்டத்தட்ட 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையிலான ஆப்பிள் ஐபோன்கள் இந்தியாவில் ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த சாதனங்களின் மீதான வரியில் 5 சதவிகிதம் குறைப்பு ஆண்டுக்கு சுமார் 35 முதல் 50 மில்லியன் டாலர் பயனளிக்கும் என ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் இணை நிறுவனர் நீல் ஷா தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ்கான் மற்றும் இந்தியாவின் டாடா குழுமம் போன்ற உற்பத்தியாளர்கள் மூலம் ஆப்பிள் இந்தியாவில் உள்ளூர் உற்பத்தியை அதிகரித்தாலும், இன்னும் சில ஆப்பிள் பிராண்டுகளின் உயர் ரக ஸ்மார்ட் போன்களான புரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை இறக்குமதி செய்கிறது.
சாம்சங் போன்ற பிற உற்பத்தியாளர்களும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கின்றன. தற்போது, இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் 6% பங்குகளை கொண்டுள்ளது.
ஜனவரியில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மொபைல் போன்களின் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளை விட இந்தியா முக்கிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி மையமாக மாறுவதில் பின்தங்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்தது. குறைந்த வரிகள் உலகளாவிய நிறுவனங்களை விரைவாக ஈர்ப்பதற்கு அவசியம் என அவர்கள் வாதிட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். 24 பில்லியன் டாலர் மதிப்பிலான உள்ளூர் உற்பத்தி திட்டத்தில் மொபைல் போன்கள் சார்ந்த திட்டங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications