மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான வரியைக் குறைத்த சில நாட்களில், உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன்-களின் விலையை 3-4% விலை குறைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இன்று முதலே ரீடைல் சந்தையில் ஐபோன்களின் விலை குறைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புரோ அல்லது புரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.5100 முதல் ரூ.6000 வரை குறைக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ஐபோன் 13, 14 மற்றும் 15 ஆகிய மாடல்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், அவற்றின் விலையும் ரூ.300 குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் SE-யின் விலை ரூ.2300 குறைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் முதல் முறையாக தனது புரோ மாடல்களின் விலையைக் குறைத்துள்ளது என்பதை டெக் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய பட்ஜெட்டில் மொபைல் போன்களுக்கான அடிப்படை சுங்க வரி 20% -லிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, புதிய மாடல்கள் அறிமுகமான பிறகு ஆப்பிள் பழைய புரோ மாடல்களை நிறுத்திவிடும். விற்பனையை அதிகரிக்க டீலர்கள் மற்றும் ரீசெல்லர்களுக்கு மட்டுமே சில சிறப்பு தள்ளுபடிகளை வழங்குவார்கள். புரோ மாடல்களின் MRP விலை இதற்கு முன்பு குறைக்கப்பட்டத்தில்லை, முதல் முறையாக மத்திய அரசு இறக்குமதி வரியை குறைந்தது மூலம் ரீடைல் சந்தையில் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
ஐபோன்களின் முழு விலை பட்டியல்:
| மாடல் | பழைய விலை | புதிய விலை |
| ஐபோன் SE | ரூ.49,900 | ரூ.47,600 |
| ஐபோன் 13 | ரூ.59,900 | ரூ.59,600 |
| ஐபோன் 14 | ரூ.69,900 | ரூ.69,600 |
| ஐபோன் 14 Plus | ரூ.79,900 | ரூ.79,600 |
| ஐபோன் 15 | ரூ.79,900 | ரூ.79,600 |
| ஐபோன் 15 Plus | ரூ.89,900 | ரூ.89,600 |
| ஐபோன் 15 Pro | ரூ.1,34,900 | ரூ.1,29,800 |
| ஐபோன் 15 Pro Max | ரூ.1,59,900 | ரூ.1,54,000 |
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை-க்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இதுநாள் வரையில் ஐபோன் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதே தொழிற்சாலையில் ஐபேட்களைத் தயாரிக்க ஃபாக்ஸ்கான் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தொழிற்சாலையில் ஆப்பிளின் ஸ்மார்ட்போன்களை மட்டுமே தயாரித்தது வருகிறது. முதல் முறையாக பலகட்ட ஆய்வுகள், சோதனைகளுக்குப் பிறகு ஐபேட் தயாரிக்கும் முயற்சியில் ஆப்பிள் இறங்கியுள்ளது. இதில் முக்கியமாக ஆப்பிள் ஸ்ட்ரிக்ட் ஆர்டரை தொடர்ந்து முதல் நிறுவனமாக ஃபாக்ஸ்கான் தனது சென்னை தொழிற்சாலையில் ஆப்பிள் ஐபேட்களைத் தயாரிக்கத் தொடங்குவதில் தீவிரமாக பணியாற்றத் துவங்கியுள்ளது.
இதன் மூலம் விரைவில் மேடு இன் இந்தியா என்ற சொற்கள் உடன் ஐபேட் வெளியாகும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications