ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்று தொடங்குகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பத்து அணிகள் தங்கள் அணிகளை உருவாக்கும். 1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர். அணிகள் தங்களிடம் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் மீதமுள்ள பர்ஸ் மதிப்புகளை அறிவித்துள்ளன. ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் அதிக ஏலத்தை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஏலம் நடைபெறவுள்ளது. நட்சத்திர பட்டியலில் இங்கிலாந்தில் ஜாஸ் பட்லர் உள்ளிட்ட வீரர்களும், 2-வது பட்டியலில் யுவேந்திர சாஹல் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த முக்கிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஏலப்பட்டியலில் 12 பேர் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்: இதில் முதல் ஜாஸ் பட்லர், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், காகிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களது அடிப்படை தொகை ரூ.2 கோடியாக உள்ளது. இதில் ரிஷப் பண்ட்-ஐ ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர், ரூ.25 கோடிக்கு மேல் வாங்கப்பட்டலாம் என கூறப்படுகிறது.

அடுத்தப்படியாக, 2-வது பட்டியலில் யுவேந்திர சாஹல், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், கே.எல்.ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் டேவிட் மில்லரின் அடிப்படை தொகை ரூ.1.50 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற 5 வீரர்களுக்கு ரூ.2 கோடி அடிப்படை விலையாக உள்ளது.
ஏலத்துக்காக பதிவு செய்துள்ள வீரர்களில் 81 பேரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.1.50 கோடியில் 27 வீரர்களும், ரூ.1.25 கோடியில் 18 பேரும், ரூ.1 கோடியில் 23 பேரும், ரூ.75 லட்சத்தில் 92 பேரும், ரூ.50 லட்சத்தில் 8 பேரும், ரூ.40 லட்சத்தில் 5 பேரும், ரூ.30 லட்சத்தில் 320 பேரும் உள்ளனர்.
ஐபிஎல் ஏலப்பட்டியலில் தமிழக வீரர்கள் விவரம்: அஸ்வின், நடராஜன், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், நாராயன் ஜெகதீசன், பாபா இந்திரஜித்,ஆந்த்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்ஜன் பால், அஜிதேஷ் குருசாமி, ரித்திக் ஈஸ்வரன், ஜாபர் ஜமால், முகமது அலி, லக்சய் ஜெயின், பி.விக்னேஷ், ஷிவம் சிங், குர்ஜப்னீத் சிங், சந்தீப் வாரியர், முருகன் அஸ்வின், மணிமாறன் சித்தார்த், சஞ்சய் யாதவ், சோனு யாதவ், ஜாதவேத் சுப்பிரமணியன், முகமது கான், துஷார் ரஹேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications