இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), 2026 சீசனுக்கான ஏலத்தை வெளிநாட்டில் நடத்தும் என பிடிஐ செய்தியின் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்பு இந்த வருட ஏலம் இந்தியாவில் நடக்கும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டும் வெளிநாட்டில் அதுவும் வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டு இருந்த வேளையில், திடீரென அபுதாபிக்கு மாற்ற என்ன காரணம்..? நேற்றை டெல்லி விபத்திற்கும் இந்த முடிவுக்குக் காரணமா..?

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம், டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் அபுதாபியில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஏலம், கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் நடந்த மெகா ஏலத்திற்குப் பிறகு மினி ஏலமாக இருக்கும். இந்த ஏலத்தில் ஐபிஎல் அணிகளுக்கு தங்கள் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் சிறிய மாற்றங்களைச் செய்ய உதவும்.
ஐபிஎல் ஏலங்கள் வெளிநாட்டில் நடைபெறுவது இது மூன்றாவது முறை. 2023ல் துபாயில் நடந்த ஏலம் புதிய வெளிநாட்டு போக்கைத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து 2024ல் ஜெட்டா-வில் (சவுதி அரேபியா) நடைபெற்றது. அபுதாபி-ஐ தற்போது ஐபிஎல் ஏலத்திற்கான மூன்றாவது வெளிநாட்டு இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் டிசம்பர் 15 அல்லது 16 தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளது என அதிகாரி தெரிவித்தார்.
ஐபிஎல் அணிகள் ஏலத்தை டிசம்பர் 14ஆம் தேதி நடத்தக் கோரிக்கை வைத்த நிலையில், டிசம்பர் 15-16 ஆம் தேதிகளில் தான் நடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கோப்பையை முதல் முறையாக வென்ற நிலையில், இந்த ஆண்டு கேப்பை யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மத்தியிலான வதந்திகள் மூலம் இப்போதே சூடுபிடித்துள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து ரவீந்தர ஜடேஜா கொடுத்துவிட்டு சஞ்சு சாம்சன்-ஐ சிஎஸ்கே அணிக்கு அழைத்து வருவதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிஎஸ்கே அணி சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ கூட பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தை மும்பை அல்லது பெங்களூரில் நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், வெளிநாட்டு ஊழியர்கள், உறுப்பினர்கள் வருவதற்கு வெளிநாடு தான் சரியாக இருக்கும் என்பதால் அபுதாபி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் Ashes போட்டிக்கான பயிற்சி நடத்து வருவதால் வெளிநாட்டு கோச் மற்றும் உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வருவது மிகவும் கடினம் என்பதால் 3வது முறையாக வெளிநாட்டைத் தேர்வு செய்துள்ளது ஐபிஎல் நிர்வாக குழு. இதனால் டெல்லி விபத்திற்கும் ஐபிஎம் ஏல இடத்தின் தேர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மேலும் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் தங்கள் அணியில் இருக்கும் விளையாட்டு வீரர்களை தக்க வைக்கும் முடிவை நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அட்சய பாத்திரம்!! ஒவ்வொரு நொடிக்கும் காசு!!

தோனி-க்கு நிகராக சஞ்சு சாம்சன்.. குரு சிஷ்யன் என்றால் சும்மாவா..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications