இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்போது நிறுத்தப்பட்டு இருக்கின்றன. ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டு இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐக்கு ஒவ்வொரு போட்டிக்கும் 125 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன . இதனால் பாதுகாப்பு கருதி ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. தற்போதைக்கு ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வாரம் முடிந்த பின்னர் மீண்டும் போட்டி தொடருமா அல்லது போட்டி அப்படியே நிறுத்தப்படுமா என்பது ஐபிஎல் நிர்வாக குழு முடிவு செய்யும்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் தணிகிறதா அல்லது மேலும் அதிகரிக்கிறதா பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்படும். தற்போது ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு விளையாட்டின் மூலமும் பிசிசிஐக்கு 100 முதல் 125 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் நிர்வாகக் குழு என்பது பிசிசிஐயின் ஒரு அமைப்பாகும் . இந்த அமைப்புதான் ஐபிஎல் போட்டிகளை முழுமையாக நிர்வகித்து வருகிறது. இந்த குழு ஐபிஎல் அணிகள் இடமும், அணிகளின் உரிமையாளர்களிடமும் போட்டி ஏழு நாட்கள் முடிந்து தொடங்கலாம் அல்லது அப்படியே நிறுத்தவும் படலாம் என்பதால் எதற்கு வேண்டுமானாலும் தயாராக இருங்கள் என கூறி இருக்கிறதாம்.
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் குடும்பத்தினரோடு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். தற்போதைக்கு போட்டி நிறுத்தப்பட்டு இருப்பதால் வீரர்கள் சொந்த நாட்டிற்கு சென்று விட்டதாகவும் போட்டி தொடர்பான அடுத்த அறிவிப்பு வரும்போது அவர்கள் திரும்ப வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஒருவேளை தற்போதைக்கு ஐபிஎல் போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டால் மீதமுள்ள போட்டிகளை வரும் ஆகஸ்டில் இருந்து செப்டம்பர் மாதம் ஆகிய இரண்டு மாதங்களில் நடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது . இந்த ஆண்டு போட்டி முழுவதுமாகவே நிறுத்தப்படுகிறது எனும் போது இந்த ஐபிஎல் போட்டி சார்ந்த அனைத்து வணிகமும் பாதிக்கப்படும்.
பிசிசிஐ ஐபிஎல் போட்டிக்காக பெற்றிருக்கும் ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்சர் கட்டணங்களில் கணிசமான தொகையை குறிப்பிட்டு நிறுவனங்களுக்கு திரும்ப வழங்க நேரிடலாம். குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அவற்றை திரும்ப வழங்க வேண்டிய சூழல் உண்டாகும்.
மேலும் ஐபிஎல் போட்டிகள் தொடர்பான தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும். பிளே ஆஃப் போட்டிகள் உட்பட 16 போட்டிகள் இன்னும் நடைபெற வேண்டி இருக்கிறது. போட்டிகள் தடைப்பட்டு இருப்பதால் காப்பீட்டு நிறுவனங்கள் அதற்குரிய இழப்பீடை தந்தாலும் இந்த பிரச்சனையில் அதிக இழப்பை சந்திப்பது பிசிசிஐ, ஒளிப்பதிவு உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஸ்பான்சர் கொடுத்த நிறுவனங்கள் ஆகியவைதான்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications