இந்தியாவின் பணக்கார விளையாட்டு அமைப்பான பிசிசிஐ, வருமான வரித்துறைக்கு எதிரான வழக்கில் வெற்றிபெற்று உள்ளது. மத்திய வருவாய்த் துறை ஐபிஎல் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் என அறிவித்து, அதற்காக வழங்கும் தொடுத்து இருந்தது.
வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
இந்த வழக்கிற்கு எதிராக அப்பீல் செய்த பிசிசிஐ, மும்பை நீதிமன்றத்தின் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (ITAT), பிசிசிஐ அமைப்பு இவ்வழக்கின் விசாரணையில் ஐபிஎல் மூலம் வருமானம் பெற்றாலும், இது கிரிக்கெட் விளையாட்டை ஊக்கப்படுத்தும் ஒரு விஷயமாக உள்ளது. இதனால் பிற விளையாட்டுப் போட்டிகளில் அறிவிக்கப்படுவது போல் வருமான வரியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
பிரிவு 12A
வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ITAT)-ன் மூன்று ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்பு 3வது முறை நோட்டீஸ்-க்கு பின்பு மும்பை பென்ச்-ல் ஆஜராகியுள்ளது. இந்தச் சந்திப்பில் பிசிசிஐ அமைப்பு ஐபிஎல் மூலம் பெறும் வருமானத்திற்கு ஏன் பிரிவு 12A கீழ் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும் என வருவாய்த் துறை 2016-17ல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
கிரிக்கெட்
தற்போது இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது, இந்தியாவில் கிரிக்கெட்-ஐ பிரபலமாக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்ட ஒரு கட்டமைப்புக்குக் கீழ் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த விளையாட்டுக்கு ஸ்பான்சர் செய்பவர்கள் அதிகத் தொகை கொடுக்க வேண்டியுள்ளது, அனைத்து பிரிவுகளையும் இதன் மூலம் பயன்படுத்தப்பட்டுக் கிரிக்கெட்-ஐ பிரபலமாக்கும் முயற்சியில் இருந்து சற்றும் விலகவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
பிசிசிஐ
இதனால் ஐபிஎல் தொடர்பாகப் பிசிசிஐ மீது வருமான வரித்துறை தொட்டுத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும் ஐபிஎல் விஷயத்தில் வருமானம் பெறுவதைக் கணக்கில் கொண்டு விளையாட்டைப் பிரபலப்படுத்தும் விஷயத்தைப் பார்க்காமல் வரித் துறை தவறு செய்துவிட்டது எனப் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
வரி சலுகை
ஆனால் இத்தகைய வரிச் சலுகைகள் அரசு அமைப்புகளுக்குத் தான் வழங்க வேண்டும் தனியார் அமைப்புகளுக்கு வழங்க கூடாது, மேலும் ஐபிஎல் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதை எப்படிக் கண்காணிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என வரித்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications