அமெரிக்கா உடனான ராணுவ தாக்குதல், தற்போது வர்த்தக போராக எதிர்கொண்டு வரும் ஈரான் அடுத்தடுத்து பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் ஈரான் ஓமான் நாட்டுடன் இணைந்து ஹார்முஸ் வழித்தடத்தை மொத்தமாக கையகப்படுத்தும் முயற்சியை கையில் எடுத்திருக்கும் வேளையில் புதிய விதிமுறையை கொண்டு வர ஈரான் முடிவு செய்துள்ளது.
அதாவது ஹார்முஸ் வழித்தடத்தில் இனி எந்தொரு போர் கப்பல், ஆயுதம் ஏய்ந்திய கப்பல்கள் உள்ளே வரக்கூடாது என்ற வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க ஈரான் மற்றும் ஓமான் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாக ஈரான் நாட்டின் துணை வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்காக இரு நாட்டு தலைவர்களும் கூடி ஆலோசனை செய்து வருகின்றனர். இப்பேச்சுவார்த்தை வெற்றி அடையும் பட்சத்தில் ஹார்முஸ் வழித்தடத்தில் சரக்கு கப்பலின் போக்குவரத்து மீண்டும் துவங்கும்.
அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தை தொடர்ந்து தாமதம் ஆவது மட்டும் அல்லாமல் போர் நிறுத்ததிற்கான தீர்வுகள் எட்டப்படாமல் உள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா ஈரான் மீதும், ஈரானுடன் வர்த்தக தொடர்புடைய நாடுகள் மீது 2ஆம் நிலை தடைகளை விதிக்க துவங்கியுள்ளது.
இந்த நிலையில் தான் கடந்த ஒரு வாரமாக ஈரான் - ஓமான் அமெரிக்காவின் தலையீடு, அதிகாரம் இல்லாத வகையில் தற்காலிக வழித்தடத்தில் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து துவங்க இரு நாடுகள் முடிவு செய்திருக்கிறது.
ஏற்கனவே இரு நாடுகளும் ஹார்முஸ்-ல் 2 புதிய வழித்தடத்தை உருவாக்கியிரும் நிலையில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் நடத்து வருகிறது. இதன் வாயிலாக கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருகிறது.
ஹார்முஸ் வழித்தடத்தில் போர் கப்பல்கள் அனுமதிக்கப்பாடாவிட்டால் கட்டாயம் இது அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியாக இருக்கும். புதிதாக எந்த கப்பலையும் கொண்டு வர முடியாது, அதேபோல் ஏற்கனவே இருக்கும் கப்பலுக்கும் எவ்விதமான உதவியும் கிடைக்காது.
அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து இடையூராக நிற்கிறது இஸ்ரேல், பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், உத்தரவிட்டும் இஸ்ரேல் தொடர்ந்து காசா மற்றும் ஹாமாஸ் படைகள் மீது தாக்குதல் நடத்தி வரும் காரணத்தால் அமெரிக்கா - ஈரான் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர முடியாத நிலை தொடர்கிறது.
இதேபோல் அமெரிக்கா தற்போது 2ஆம் நிலை தடைகளை விதிக்க துவங்கியிருக்கும் காரணத்தால் டிரம்ப் நிர்வாகமும் பேச்சுவார்த்தைக்கு அவரசம் காட்டவில்லை.
ஈரான் - ஓமான் திட்டமிட்டப்படி ஹார்முஸ் வழித்தடத்தில் போக்குவரத்து சீராகும் பட்சத்தில் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை கட்டாயம் சீராகும். ஆனால் இதேவேளையில் இரு நாடுகளும் பெரும் கட்டணத்தை வசூலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

