மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதல் கத்தாரின் முக்கிய எரிசக்தி அமைப்புகளை பெரிதும் பாதித்துள்ளது. உலகின் முன்னணி LNG ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான Qatar-இன் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி திறனில் சுமார் 17% பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக QatarEnergy நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஹார்மூஸ் வழித்தடத்தில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து நெருக்கடியால் இந்தியாவுக்கு LNG சப்ளை தடைபெற்று எரிபொருளுக்கு பெரும் நெருக்கடி உருவாகியிருக்கும் வேளையில், தற்போது கத்தார் நாட்டின் உற்பத்தி மட்டத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் போர் முடிந்தாலும் சிலிண்டர் பிரச்சனை தீராது என்பதை 17 சதவீத உற்பத்தி பாதிப்பு காட்டுகிறது.

ராஸ் லஃபான் தொழிற்சாலை சேதம்
ஈரான் தாக்குதலில் முக்கியமாக Ras Laffan Industrial City பகுதியில் உள்ள எரிசக்தி உற்பத்தி தளம் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த பகுதி கத்தாரின் LNG உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு மையமாக இருப்பதுடன், பல சர்வதேச நிறுவனங்களின் செயல்பாடுகளும் இங்கு நடைபெறுகின்றன.
ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு பின் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கத்தார் பாதுகாப்பு படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆயினும் உற்பத்தி திறனில் பெரும் ஒட்டை விழுந்துள்ளது தான் தற்போதைய முக்கியமான பிரச்சனையாக உள்ளது.
QatarEnergy நிறுவனத்தின் CEO சாத் அல்-காபி அளித்த தகவலின்படி, இந்த சேதங்களை முழுமையாக சரிசெய்ய 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம். இது உலகளாவிய LNG விநியோகத்தில் நீண்டகால இடையூறுகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவலை கொடுத்துள்ளார்.

ரமலான் பண்டிகை
ரமலான் மாதத்தில் இப்படியொரு தாக்குதல் நடப்பது எதிர்பாராதது என்றும், குறிப்பாக ஒரு முஸ்லிம் நாடான ஈரான் இப்படிச் செயல்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் Saad al-Kaabi தெரிவித்துள்ளார்.
உலக எரிசக்தி சந்தை பாதிப்பு
Qatar உலகின் முக்கிய LNG ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருப்பதால், இந்த தாக்குதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக LNG விலை உயர்வு, விநியோக தட்டுப்பாடு மற்றும் நீண்டகால சப்ளை சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஈரான் வார்னிங்
இந்த தாக்குதலுக்கு முன், சவுதி அரேபியா, UAE மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில் Ras Laffan Industrial City முக்கிய இலக்காக குறிப்பிடப்பட்டது.
எரிவாயு சந்தையில் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் LPG சிலிண்டர் விலை, CNG, PNG விலை உயரவும் வாய்ப்புள்ளது. காரணம் இந்தியாவுக்கான பெரும்பகுதி எரிவாயு கத்தார் நாட்டில் இருந்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தீவிரமடையும் ஈரான் போர்: ஓமன் வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பும் இந்தியா!! அடுத்தது என்ன?

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

ஈரான் போரில் அடுத்த திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மெகா திட்டம் தீட்டும் ஈரான் அரசு..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

குறிவைத்து அடித்த ஈரான்.. 3 இஸ்ரேல் விமானங்கள் நொறுங்கியது..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

துபாய் முதல் கத்தார் வரை.. ஈரானின் திடீர் தாக்குதலால் ஷாக்.. அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன..?

டிரம்ப்-ன் ராஜதந்திரம்.. ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் குட்நியூஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: எவ்வளவு சொல்லியும் மக்கள் கேட்கவில்லை..!

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

ஈரான் போர்: டிரம்புக்கு குட்டு வைத்த நட்பு நாடுகள்; எங்கள கேட்டா போர் தொடுத்தீங்க என கேள்வி!!

அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா..! கொந்தளிக்கும் ஈரான்..! 2ஆவது வாரத்தில் ஈரான் போர்..!



Click it and Unblock the Notifications
