அமெரிக்கா , இஸ்ரேல் நடத்திய கூட்டு ராணுவ தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொலை செய்யப்பட்டார். கமேனி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரான் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏராளமான மக்கள் கண்ணீர் மல்க நாடு முழுவதும் பேரணியாக சென்றனர்.
கமேனியின் படுகொலையால் கொத்திப்படைந்த ஈரான் ராணுவம் இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. 28ஆம் தேதி இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலை அடுத்து கமேனி தன்னுடைய அலுவலகத்தில் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கமேனி மற்றும் அவர் உடன் இருந்த அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈரான் நாட்டு ஊடகங்களும் கமேனி கொல்லப்பட்டதை உறுதி செய்தன. இதனை அடுத்து ஈரான் முழுவதும் 40 நாட்களுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 7 நாட்கள் அரசு விடுமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் ஈரான் நாட்டு அரசு கமேனிக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் என அறிவித்திருந்ததது.

கமேனியின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக டெஹ்ரானி கொமேனி தொழுகை மண்டபத்தில் உடல் வைக்கப்படும் என்றும் அதன் பிறகு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. ஒருபுறம் இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதல் தொடர்கிறது என்பதாலும் கமேனியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் என்பதாலும் திடீரென ஈரான் அரசு தங்களுடைய முடிவை மாற்றி அமைத்து இருக்கிறது.
தற்போதைக்கு அவருடைய இறுதி ஊர்வலம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஈரான் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. கமேனியின் இறுதி ஊர்வலத்திற்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் அமைதியான முறையில் வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செல்வதை உறுதிப்படுத்தவும் இந்த நிகழ்வுகளை தள்ளி வைத்திருப்பதாக ஈரான் நாட்டு அரசு கூறுகிறது.
கிட்டதட்ட 36 ஆண்டுகளாக ஈரானின் அசைக்க முடியாத தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய கூட்டுறவு ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார். கமேனியின் குடும்பத்தில் அவரது மகன் மொஜ்தபாவரை தவிர அனைவருமே கொல்லப்பட்டுள்ளனர். இப்போ நாட்டின் தலைவராகவும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் தலைவராகவும் மொஜ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் போர்: வான்வெளியில் மட்டுமல்ல நீருக்கடியிலும் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

டிரம்ப் மிரட்டல்.. ஈரான் நாட்டில் பெரிய அலை வரபோகுது.. பரபர அறிவிப்பு..!!

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!



Click it and Unblock the Notifications

