உலக நாடுகள் அடுத்தடுத்து இந்தியா உடனான உறவை மேம்படுத்தவும், இந்தியா உடனான வர்த்தகத்தை மேம்படுத்தவும், இந்தியர்களைச் சுற்றுலாப் பயணியாக ஈர்க்கவும் விசா பெற வேண்டிய கட்டாயத்தைத் தளர்த்தி வருகிறது. இலங்கை, தாய்லாந்து, மலேசியா வரிசையில் தற்போது ஈரான் இணைந்துள்ளது.
இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட சுமார் 33 நாடுகளின் குடிமக்கள் ஈரான் நாட்டிற்குள் நுழைய விசா தேவையை நீக்குவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஈரான் உலக நாடுகள் உடன் வெளிப்படைத்தன்மை மற்றும் ஈடுபாட்டை வளர்க்க முயற்சியைத் துவங்கியுள்ளது.

ஈரான் நாட்டின் பொருளாதாரம் அமெரிக்கா மற்றும் பிற வல்லரசு நாடுகளின் தடையின் காரணமாக முடங்கியிருக்கும் வேளையில், உலக நாடுகள் உடனான தொடர்பு இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச அடிப்படையில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் ஈரான் அரசு, 33 நாடுகளின் குடிமக்களுக்கு விசா அவசியத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இப்புதிய அறிவிப்பு மூலம் ஈரான் அரசு சுமார் 45 நாடுகளில் இருந்து மக்களை விசா இல்லாமல் ஏற்றுக்கொள்கிறது. சுற்றுலாப் பயணிகள் வருகையை ஈர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஈரானிய கலாச்சாரப் பாரம்பரியம், சுற்றுலா மற்றும் கைவினைப்பொருட்கள் அமைச்சர் எஸதுல்லாஹ் ஜர்காமி தெரிவித்தார் என ஈரான் நாட்டின் IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் நாட்டின் கதவுகளை உலகிற்குத் திறக்க அரசாங்கம் விரும்புகிறது. இந்த முடிவு அரசாங்கத்தால் மிகவும் துணிச்சலுடனும், தைரியமாகவும் எடுக்கப்பட்டது என்று எஸதுல்லாஹ் ஜர்காமி தெரிவித்தார்.
வெளி விவகார அமைச்சகத்தின் தகவல் படி தற்போது இந்தியா அரசு அதிகாரிகளுக்கு, அரசுப் பணி நிமித்தமாக ஈரானுக்குச் செல்லும் போது விசா-விலக்கு உள்ளது. இன்றைய அறிவிப்பு மூலம் சாதாரண இந்திய பாஸ்போர்ட்-ஐ வைத்திருப்பவர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் கென்யா அனைத்து நாட்டுப் பயணிகளுக்கும் விசா தேவைகளை ரத்து செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?



Click it and Unblock the Notifications