ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் மறைவு ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் உலக சந்தைகளுக்கும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் சக்தி கொண்டது.
ஈரான் அரசுக்கு சொந்தமான பிரஸ் டிவி ட்விட்டரில், "ஈரான் அதிபர் ரைசி, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்தொல்லாஹியான், கிழக்கு அசர்பைஜான் கவர்னர் மலேக் ரஹ்மதி, கிழக்கு அசர்பைஜான் இமாம் முகமது அலி அலே-ஹாஷெம் மற்றும் பல பயணிகள் உடன் ஈரானின் வடமேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

கடந்த 20 மணிநேரமாக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் சர்வதேசச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்ராகிம் ரைசி மரணம் கச்சா எண்ணெய், தங்கம், பங்குச்சந்தை ஆகியவற்றை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை எப்போது பார்ப்போம். இதை கட்டாயம் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
கச்சா எண்ணெய் விலையில் தாக்கம்: ஈரானின் தலைமை மாற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தைகளில் உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் நிலையற்ற தன்மைக்கு வழிவகுக்கும். ஏனெனில் முதலீட்டாளர்கள் ஈரானின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கணிசமான தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.
இப்ராகிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குப் பிறகு திங்கள்கிழமை ஆசிய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன. குறிப்பாக பென்ச்மார்க் கச்சா எண்ணெய் ஆன பிரெண்ட் கச்சா எண்ணெய், WTI கச்சா எண்ணெய் ஆகியவை 10 நாள் உயர்வை இன்று பதிவு செய்துள்ளது.
எரிபொருள் சப்ளை சீர்குலைவு: ஈரான் நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் ஏதேனும் சீர்குலைவு ஏற்பட்டால், சர்வதேச கச்சா எண்ணெய் சப்ளை மற்றும் விலையை பாதிக்கும். குறிப்பாக ஈரான் ஒரு முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர் என்பதைக் வைத்துப் பார்க்கும் போது இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தங்கம் மீதான பாதிப்பு: ஈரான் போன்ற கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் அதிபரின் மரணம் என்பது பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயமாகும். இத்தகைய காலகட்டத்தில் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் மட்டும் அல்லாமல் உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேடி ஓடுவார்கள்.
புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவும் போது தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளுக்கான தேவையை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில் தங்கம் மீது அதிகமாக முதலீடு செய்யப்படும் போது தங்கம் விலை உயர்த்தும். ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குப் பிறகு தங்கம் விலை சாதனை உயர்வை எட்டியது.
பங்குச் சந்தைகளில் தாக்கம்: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் மரண செய்தி, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கான சாத்தியமான தாக்கங்களை முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும்போது பங்குச் சந்தைகளையும் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
இருப்பினும், OPEC அதிகளவிலான கச்சா எண்ணெய் இருப்பு வைத்திருக்கும் காரணத்தால் தற்போது இதன் சப்ளை செயினில் பாதிப்பு இருக்காது என கணிக்கப்பட்டாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைக் கட்டாயம் பாதிக்கும். இதன் வாயிலாகப் பங்குச்சந்தையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும்.
More From GoodReturns

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

50 பைசா சரிவு.. ஆடிப்போன இந்தியா.. ஈரான் போரால் இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!



Click it and Unblock the Notifications