ஈரான் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் நாட்டு ராணுவம் அமெரிக்க போர் விமானத்தையே சுட்டு வீழ்த்தி இருக்கிறது. அமெரிக்காவும் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது.கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளே இல்லை என கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் மோதல்கள் தீவிரமடைந்த வண்ணம் இருக்கின்றன.
இன்றைய தினம் அமெரிக்காவின் நவீன போர் விமானமான f15 என்ற ஜெட் போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இந்த விமானத்தில் இருந்த அமெரிக்க போர் விமானியின் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதற்கு இடையே அவரை பிடித்து தருபவருக்கு பரிசு தருவதாக ஈரான் நாட்டு ராணுவமான புரட்சிகர பாதுகாப்பு படை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.ஈரானின் இந்த செயல் அமெரிக்காவை கடுமையாக கோபமடைய வைத்துள்ளது. ஏற்கனவே ஈரான் மீது 2 -3 வாரங்களுக்கு தீவிர தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கிடையே மத்திய கிழக்கில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை அமெரிக்க அதிகப்படுத்தியுள்ளது. எனவே இனி வரும் நாட்களில் இன்னும் போர் தீவிரமடையலாம் என சொல்லப்படுகிறது.
ஈரான் போரால் பல நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே எப்படியாவது போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தையை நடத்தப் போவது யார் என்ற கேள்வி உலகம் முழுவதுமே நீடிக்கிறது.

பல்வேறு நாடுகளும் இந்தியா இரு நாடுகளுடனும் சிறந்த நட்புறவை கொண்டிருப்பதால் இந்த அமைதி பேச்சு வார்த்தையை நடைமுறைப்படுத்தலாம் என யோசனை தெரிவித்தன. பிரதமர் மோடி இந்த அமைதி பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டும் என பின்லாந்து நாட்டு அதிபர், அமெரிக்க அரசின் முன்னாள் பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆகியோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் முந்திக்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்தது. ஆனால் தற்போது பாகிஸ்தான் மூக்கறுப்பட்ட நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் போர் தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதை ஈரான் தரப்பு ஏற்கவில்லையாம். போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பாகிஸ்தானில் இருக்கக்கூடிய அமெரிக்க தரப்பு பிரதிநிதிகளை சந்திக்க ஈரான் தரப்பு மறுப்பு தெரிவித்திருப்பதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தி தெரிவித்திருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா தரப்பில் முன்வைக்கக்கூடிய எந்த ஒரு நிபந்தனைகளும் ஏற்கப் போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறதாம். மேலும் பாகிஸ்தான் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது நம்பகத்தன்மையோடு இருக்காது என ஈரான் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளதாம். இதனால் பாகிஸ்தான் முன்னெடுத்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டு நிற்பதாக சொல்லப்படுகிறது.
மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வந்தால் உலக அரசியலில் பாகிஸ்தானுக்கு பெரிய பெயரை பெற்று தந்திருக்கும். இதற்காகத்தான் பாகிஸ்தான் மிகவும் தீவிரமாக முயற்சி செய்தது. ஈரானுடன் எல்லையை பகிரக்கூடிய நாடாகவும் பாகிஸ்தான் இருக்கிறது. அதேவேளையில் அமெரிக்கா , ஐக்கிய அரபு அமீரகம், சவுதி போன்ற நாடுகளோடும் நல்ல நட்புறவைக் கொண்டிருக்கிறது என்பதால் இந்த அமைதி பேச்சு வார்த்தையை முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்தி விடலாம் என பாகிஸ்தான் திட்டமிட்டது.
ஆனால் அது தற்போது கை கொடுக்கவில்லை. இதற்கிடையே கத்தார் தரப்பில் முன்னெடுக்கக்கூடிய பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. டிரம்ப் , ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி வந்த நிலையில் பாகிஸ்தான் தான் அந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததாக சொல்லப்பட்டது. ஈரான் அதனை ஏற்க மறுத்துள்ளதால், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுவது உண்மை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

பாகிஸ்தான் நாட்டில் ஸ்மார்ட் லாக்டவுன்.. தீயாய் பரவும் தகவல்..!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!



Click it and Unblock the Notifications

