பாகிஸ்தான், கத்தார் நாடுகள் 10 நாள் போர் நிறுத்த திட்டத்தை முன்வைத்தும் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான தாக்குதல் 11வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இன்று நடந்த தாக்குதலில் ஈரான் ராணுவம் மற்றும் IRGC படைகள் நடத்திய தாக்குதலில் விளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ மற்றும் வர்த்தக இடங்களை தாக்கியது.

கடந்த 10 நாட்களாக ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே தாக்கி வந்த ஈரான் இன்று குவைத் நாட்டில் இருக்கும் அமேசான் டேட்டா சென்டர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. இதன் மூலம் வளைகுடா பகுதிகளில் குறிப்பாக துபாய் முதல் சவுதி அரேபியா வரையில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களின் அலுவலகங்கள் தாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.
ஈரான் போர் நிறுத்தத்திற்கு முன்பு இதேபோன்ற தாக்குதலை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஈரான் இன்று பஹ்ரைன், ஜோர்டன், குவைத் நாடுகளில் இருக்கும் அமெரிக்க கட்டமைப்புகளை பெரிய தாக்கியது குறிப்பிட்டதக்கது.
இன்றைய தாக்குதலை ஈரான் அரசின் செய்தி தளமான IRIB மற்றும் தஸ்னிம் நியூஸ் ஏஜென்சி உறுதிப்படுத்தியது, இதேபோல இந்த தாக்குதலை அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாகவே நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளது.
டிரம்ப்-ன் உத்தரவின் பெயரில் இன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக CENTCOM அமைப்பும் உறுதி செய்துள்ளது. அமேசான் டேட்டா சென்டர் மீதான தாக்குதல் குறித்து IRGC அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா நேற்று Dar Khuyin பகுதியில் கட்டுமான இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் IRGC ஏரோஸ்பேஸ் வீரர்கள் இன்று பஹ்ரைனில் இருக்கும் அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமாக டேட்டா சென்டர் மீது க்ரூஸ் ஏவுகணை கொண்டு தாக்கியதாக தெரிவித்தது.
இதை தாண்டி ஆப்ரேஷன் மின்னல் என்ற பெயரில் குவைத் நாட்டில் இருக்கும் அமெரிக்க கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் உறுதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications