மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி மீது இஸ்ரேல் - அமெரிக்க படைகள் திட்டமிட்டு செய்த தாக்குதலில் காயமடைந்திருக்கலாம் என்ற தகவல் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரிட்டிஷ் நாளிதழ் தி சன் வெளியிட்ட செய்தியில், மொஜ்தபா கமேனி அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்து காலை இழந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

பீட் ஹெக்செத் கூறுகையில், சமீபத்திய தாக்குதல்களில் மொஜ்தபா காமெனெய் காயமடைந்து இருக்கக்கூடும் என்றும், அந்த தாக்குதலால் அவருக்கு கடுமையான உடல் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக ஈரான் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், போர் சூழ்நிலையில் இது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஈரான், அமெரிக்க படைகளையும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் பீட் ஹெக்செத்-ன் இந்த பேச்சு ஈரான் தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் இதுவரை 15,000க்கும் மேற்பட்ட முக்கிய இலக்குகளை தாக்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் மூலம் ஈரானின் ராணுவ அமைப்புகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு கட்டமைப்புகளை தாக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், இந்த தாக்குதல்கள் ஈரானின் ராணுவ திறன் பெரிதும் பாதித்துள்ளன. இதனால் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த போர் எந்த வேகத்தில் நடைபெறும், எப்போது தாக்குதல்கள் அதிகரிக்கும் என்பதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானிப்பார் என ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இனி வரும் காலத்தில் நடைபெறும் தாக்குதல்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கலாம் என்றும், ஈரானின் முக்கிய ராணுவ திறன்களை முழுமையாக செயலிழக்கச் செய்வதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா ஈரான் மீதான இந்த தாக்குதலை 'ஆபரேஷன் ஃப்யூரி' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

அமெரிக்காவின் அடிமடியில் கை வைக்கும் IRAN..!! கூகுள், மைக்ரோசாப்ட், IBM-ஐ கட்டம் கட்டி அடிக்க முடிவு..!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

சிலிண்டர் தட்டுப்பாட்டில் சிக்காம இருக்கனுமா? உங்க வீட்டு கேஸ் அடுப்ப இப்படி யூஸ் பண்ணுங்க!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: ESMA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்!!

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!



Click it and Unblock the Notifications

