இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தெற்கு இஸ்ரேலின் டிமோனா மற்றும் அராட் நகரங்களை ஏவுகணை தாக்குதல் மூலம் தாக்கியது.
டிமோனாவில் இஸ்ரேலின் முக்கிய அணு சக்தி தளம் அமைந்துள்ளதால் இந்த தாக்குதல் புது அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதற்கும் இஸ்ரேல் தொடுத்த தாக்குதல் காரணம் என ஈரான் கூறுகிறது.
ஈரானின் இந்த தாக்குதில் இஸ்ரேலில் குறைந்தது 180 பேர் காயமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அராட் மற்றும் டிமோனாவில் பெரும் சேதம்
அராட் (Arad) நகரில் 116 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்நகர மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. டிமோனாவில் (Dimona) 64 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். பல வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட ஷார்ப்னல் மூலம் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இஸ்ரேல் பதிலடி உறுதி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் இந்த திடீர் தாக்குதல் மற்றும் பாதிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்து இதை "கடினமான இரவு" என்று குறிப்பிட்டார். ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை தொடருவோம் என்று உறுதியளித்தார்.
பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் குறைந்தது 200 குழந்தைகளாக உள்ளனர்.
இஸ்ரேல் வான்பாதுகாப்பு தோல்வி
இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலின் போது இஸ்ரேலின் பெருமைக்கு உரிய Iron Dome வான்பாதுகாப்பு அமைப்புகள் இயக்கப்பட்டன. ஆனால் சில ஏவுகணைகள் தடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடான்ஸ் அணு வசதி மீது தாக்குதல்
ஈரான் தனது நடான்ஸ் அணு செறிவூட்டல் (Natanz nuclear enrichment complex) வசதி மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறியது. ஆனால் கதிரியக்க கசிவு இல்லை என்று தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தான் அராட் (Arad) மற்றும் டிமோனாவில் (Dimona) தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய இஸ்ரேல் அதிகாரி ஒருவர், நடான்ஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பல்ல என்று மறுத்தார். இஸ்ரேல் ராணுவம் இது குறித்து முழு அறிக்கையை இதுவரையில வெளியிடவில்லை. அமெரிக்க தரப்பிலும் இதுக்குறித்து விளக்கம் கொடுக்கவில்லை.
தெஹ்ரான் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம்
இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தெஹ்ரானின் மாலெக் அஷ்தார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தாக்கியதாக அறிவித்தது. இந்த மையம் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான பாகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. "ஈரான் அணு ஆயுதம் பெற அனுமதிக்க மாட்டோம்" என்று இஸ்ரேல் ராணுவம் உறுதியளித்தது.
கடந்த 2 நாள் தாக்குதல்கள் போரை புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. ஆம் முதல் கட்டமாக ஈரான் தலைவர்கள் மற்றும் அவர்களது இருப்பிடம் மட்டுநே தாக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள் மீது ஈரான் - இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் தற்போது இரு நாடுகளும் அணு சக்தி தளங்களை குறிவைத்து தாக்க துவங்கியுள்ளது. ஈரானில் Natanz, இஸ்ரேலில் Dimona பகுதிகளில் தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பும் அணு வசதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்களுக்கு இது பொருளாதாரம், எரிசக்தி விலை உயர்வு, பாதுகாப்பு அச்சம் போன்றவற்றை தாண்டி புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

ஈரான் போர் முடிவுக்கு வருவது எப்போது? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி!!

கண்ணுக்கு தெரியாத ஆபத்து.. ஒரு 10 டாலருக்கு பின்னால் இப்படியொரு பிரச்சனை இருக்கா..?!

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

ஈரான் போரில் அடுத்த திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மெகா திட்டம் தீட்டும் ஈரான் அரசு..!!

முதல்ல LPG சிலிண்டரை சரண்டர் செய்யவும்.. அரசின் உத்தரவால் அதிர்ச்சி.. யாருக்கெல்லாம் சிக்கல்..?!

துபாய், அபுதாபி ஹோட்டல்களில் 70% தள்ளுபடி.. வெளிநாட்டு பயணிகள் வராத காரணத்தால்.. புது ஐடியா..!!



Click it and Unblock the Notifications



