ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான மோதல் 12ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) அடுத்த முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ கட்டமைப்புகளையும், இஸ்ரேல் எல்லைகளையும் தாக்கி வரும் ஈரான், அடுத்தாக தனது டார்கெட்-ஐ அமெரிக்காவின் கைவைக்க IRAN முடிவு செய்துள்ளது.
ஈரான் நாட்டின் முக்கிய மற்றும் சக்தி வாய்ந்த ராணுவ படையாக இருக்கும் IRGC "அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய வங்கிகள் மற்றும் பொருளாதார மையங்களை தாக்குவோம்" என்று தெரிவித்துள்ளதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் - அமெரிக்க படைகள் ஈரான் வங்கி ஒன்றின் மீது தாக்கப்பட்டதாக கூறிய ஈரான், இந்த புதிய எச்சரிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் வளைகடா நாடுகளிலும், இஸ்ரேலிலும் இருக்கும் அமெரிக்க டெக் நிறுவனங்களும், ஊழியர்களும் பீதியில் உள்ளனர்.
IRGC-க்கு சொந்தமான கட்டுமான நிறுவனமான Khatam al-Anbiya நிறுவன தலைமையக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எதிரி எங்கள் கைகளை புதிய இலக்குக்களை தாக்குவதற்கு திறந்துவிட்டு உள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு தொடர்புடைய வங்கிகள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது இனி டார்கெட் செய்து தாக்குதல் நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கையில், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு தொடர்புடைய வங்கிகளுக்கு 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. "அமெரிக்கர்கள் எங்கள் பதிலடிக்காக காத்திருக்கட்டும். வலிமிகுந்த பதிலடி அளிப்போம்" என்று IRGC தெரிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான போர் பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கியது முதல், அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் 10,000க்கும் மேற்பட்ட சாமானிய மக்கள் நிறைந்த இடங்கள் தாக்கப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. இந்த தாக்குதல் மூலம் 1,300க்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஸ்னிம் செய்தி நிறுவனம் (IRGC தொடர்புடையது) அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அலுவலகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் இனி ஈரானின் புதிய இலக்குகளாக பட்டியலிட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இதில் கூகுள், மைக்ரோசாஃப்ட், பாலன்டிர், ஐபிஎம், என்விடியா, ஒரக்கிள் போன்ற நிறுவனங்கள் லிஸ்டில் அடங்குகின்றனர். இந்த நிறுவனங்கள் ராணுவ பயன்பாட்டிற்கு தொழில்நுட்பம் வழங்குவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் இரண்டும் மத்திய கிழக்கில் பல அலுவலகங்களை கொண்டுள்ளன. கூகுளின் மத்திய கிழக்கு தலைமையகம் துபாயில் உள்ளது. இதேபோல் மைக்ரோசாஃப்ட் ஐக்கிய அரபு அமீரக தலைநகரில் முக்கிய அலுவலகம் கொண்டுள்ளது.
இவ்விரு நிறுவனங்களும் இஸ்ரேலில் அலுவலகங்கள் கொண்டுள்ளன. இந்த எச்சரிக்கை போர் நீடித்தால் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
More From GoodReturns

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

எல்பிஜி தட்டுப்பாடு: ரயில் பயணிகளுக்கு உணவு விநியோகத்தில் சிக்கலா? IRCTC வெளியிட்ட புது அறிவிப்பு

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications


