சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிரிவுகள் ஏற்பட்டுள்ளது. ஈரான் மற்றும் IRGC ராணுவ படை வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கை காரணமாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை 4 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு பேரல் விலை 107 டாலரை தாண்டியுள்ளது. இது உலக அளவில் எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
ஈரானின் எச்சரிக்கைக்கு முக்கிய காரணம் இஸ்ரேல் செய்த முக்கிய தாக்குதல். ஈரான் நாட்டின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலில் இஸ்ரேல் செய்த தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் இது கத்தார் நாட்டுடன் தொடர்புடைய எரிவாயு வயலில். இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் - அமெரிக்க படைகள் ஈரான் சொத்துக்களை தாண்டி ஈரானுக்கு தொடர்புடைய சொத்துக்களையும் தாக்க துவங்கியுள்ளது மூலம் புது பதற்றம் உருவாகியுள்ளது.

ஈரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்தபடி, ஈரானின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் (South Pars) தளத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடந்துள்ளது. இந்த எரிவாயு வயல் கத்தார் நாட்டுன் பகிர்ந்து கொள்ளப்படும் உலகின் மிகப்பெரிய எரிவாயு வளமாகும்.
இந்த தாக்குதலுக்கு காரணமான இஸ்ரேலை கத்தார் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்துள்ளது. கத்தார் வெளியுறவு அதிகாரி மஜித் அல்-அன்சாரி இதை ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள ஐந்து முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்களுக்கு அருகில் வசிப்பவர்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவுதியின் சம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையம், ஜுபைல் பெட்ரோ கெமிக்கல் வளாகம், யுஏஇ-யின் அல் ஹசன் எரிவாயு வயல், கத்தாரின் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை ஈரானின் புதிய டார்கெட் ஆக மாறியுள்ளது. ஈரான் நாட்டின் இந்த எச்சரிக்கை எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதன் எதிரொலியார புதன்கிழமை பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.53 டாலர் உயர்ந்து $107.95-ஆக உள்ளது. அன்று அதிகபட்சமாக $108.60 வரை சென்றது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 1.91 டாலர் உயர்ந்து 98.12 டாலராக உள்ளது.
கடந்த நான்கு நாளாக பிரெண்ட் விலை 100 டாலரை தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதன் மூலம் போர் முடிவடையும் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை பெருமளவு மத்திய கிழக்கிலிருந்து செய்கின்றன. விலை உயர்வு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தும். சில நாடுகளுக்கு முன்பு தான் ஈரான் இந்திய கப்பல்களுக்கு ஹார்மூஸ் வழித்தட்டத்தில் பயணிக்க ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது புது பிரச்சனை உருவாக்கியுள்ளது.
இந்த போர் தீவிரமடைவதால் உலகம் முழுவதும் எரிபொருள் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களும், அதன் பதிலடி அச்சுறுத்தல்களும் தொடர்ந்தால் எண்ணெய் விலை அடுத்த ஓரிரு நாட்களில் 110 டாலரை தாண்டி செல்லலாம்.
More From GoodReturns

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

கண்ணுக்கு தெரியாத ஆபத்து.. ஒரு 10 டாலருக்கு பின்னால் இப்படியொரு பிரச்சனை இருக்கா..?!

LPG தட்டுப்பாடு: 24 மணிநேரம் கெடு.. வந்தது புது ரூல்ஸ்.. அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல்..!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

ஈரான் போரில் முக்கிய திருப்பம்: பாதுகாப்பு படை தலைவர் கொலை.. நூலிழையில் உயிர் தப்பிய கமேனி மகன்!!

ஈரான் போர் முடிவுக்கு வருவது எப்போது? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி!!

ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும்? – அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா..! கொந்தளிக்கும் ஈரான்..! 2ஆவது வாரத்தில் ஈரான் போர்..!

பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு இல்லாமல் காக்கும் தென்னிந்தியா: பூமிக்கடியில் மறைந்து கிடக்கும் பொக்கிஷம்

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

துபாய், அபுதாபி ஹோட்டல்களில் 70% தள்ளுபடி.. வெளிநாட்டு பயணிகள் வராத காரணத்தால்.. புது ஐடியா..!!

இண்டிகோ- எங்களுக்கு வேற வழி தெரியல.. சிஇஓ ராஜினாமா செய்த உடன் கட்டண உயர்வு..!!



Click it and Unblock the Notifications

