ஈரான்-அமெரிக்கா இடையே ராணுவ மோதல் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய அரசு ஈரானில் இருக்கும் இந்திய குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க அரசு ஈரான் நாட்டை சுற்றி போர் கப்பல்களையும், போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரான் நாட்டை தாக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
ஈரானில் இருக்கும் இந்தியர்கள் (மாணவர்கள், வியாபாரிகள், சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் என அனைவரும்) உடனடியாக விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விதிமான போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்தி நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஜனவரி 5, 2026 அன்று வெளியான அறிவிப்பின் தொடர்ச்சியாக பிப்ரவரி 23, 2026 அன்று டெஹ்ரான் இந்திய தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்க அதிபரின் கெடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு சம்மதிக்க 10-15 நாட்கள் கெடு விதித்துள்ளார். இல்லையெனில் அது ஈரானுக்கு ஆபத்து என எச்சரித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தில் உள்ளது.
அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பிப்ரவரி 26 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் என ஓமான் வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். ஓமான் ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வருகிறது.
இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகள்
ஜனவரி 14, 2026 அறிவிப்பை மீண்டும் வலியுறுத்திய இந்திய தூதரகம், இந்தியர்கள் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது. உள்ளூர் ஊடகங்களை கண்காணித்து, வெளியில் நடக்கும் சம்பவங்களை தெரிந்துகொள்ள அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பயண மற்றும் இமிக்ரேஷன் தேவைக்கான பாஸ்போர்ட், அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
இதோடு ஈரானில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும், இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும், அப்படி செய்யாதவர்கள் (https://www.meares.com/request/home) இந்த இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஈரானில் இண்டர்நெட் இணைப்பில் பிரச்சனை ஏதும் இருந்தால், இந்தியாவில் உள்ள குடும்பத்தினர் தூதரக இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. .
ஈரானில் உள்ள இந்தியர்கள் எந்த உதவியும் தேவைப்பட்டால், இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். அவசர தொலைபேசி எண்கள்: +989128109115, +989128109109, +989128109102, +989321793599. இமெயில்: [email protected]. தூதரக இணையதளத்தில் பதிவு செய்யவும். இந்த நடவடிக்கைகள் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

துபாய் வாழ் இந்தியர்களுக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பதிவு செய்ய சொல்கிறதா இந்திய தூதரகம்? உண்மை என்ன?



Click it and Unblock the Notifications