ஈரான் போர் மூலம் செமிகண்டக்டர் துறைக்கு தற்போது பெரிய சவாலும், நெருக்கடியும் உருவாகியுள்ளது. குறிப்பார உலகளாவிய செமிகண்டக்டர் சிப் உற்பத்தியின் மையமாக உள்ள தைவான் மூலம் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க உள்ளது.
உலகளவில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் சிப்புகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை தைவானில் தயாரிக்கப்படுகின்றன. இந்த சிப்புகள் இல்லாமல் இன்று எந்த எலக்ட்ரானிக் பொருட்களும் செயல்பட முடியாது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், கார்கள், தொழில்துறை இயந்திரங்கள் முதல் ஏஐ, கிளவுட் சேவைகள் வரையில் அனைத்தும் இந்த தைவான் நாட்டில் தயாரிக்கும் சிப்புகளை நம்பிதான் உள்ளது.

என்விடியா, ஆர்ம், ஸ்னாப்டிராகன் உட்பட பெரும்பாலான சிப்கள் தைவான் நாட்டில் தான் தயாரிக்கப்படுகிறது. ஒருப்பக்கம் இந்த குட்டி நாட்டை சீனா கைப்பற்ற முயற்சித்து வரும் வேளையில், ஈரான் போர் மூலம் தைவான் நாட்டின் உற்பத்தி துறையை சீர்குலைக்கும் வகையிலான நெருக்கடி உருவாகியுள்ளது.
LNG பற்றாக்குறை
தைவான் நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் முக்கிய ஆதாரங்களில் ஒன்று LNG (Liquefied Natural Gas). அந்நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியின் சுமார் 40 சதவீதம் LNG மூலம் நடைபெறுகிறது.
ஆனால் தற்போது தைவானில் LNG கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, அந்த நாட்டில் வெறும் 11 நாட்களுக்கு மட்டுமே போதுமான LNG இருப்பு உள்ளதாக தெரிகிறது. தைவான் பயன்படுத்தும் LNGயின் ஒரு பெரிய பகுதி கத்தார் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஈரான் ஹார்மூஸ் நீர்வழிபாதையை முடக்கியதால் தைவானுக்கான எல்என்ஜி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மின்சார உற்பத்தி தடைபட்டால் தைவான் மக்கள் மட்டும் அல்லாமல் உற்பத்தி துறையும் கடுமையாக பாதிக்கப்படும்.
இந்த நிலையில், இப்பிரச்சனையை சரி செய்ய தைவான் தற்காலிகமாக மின்சார உற்பத்தியை நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் போன்ற மாற்று எரிசக்தி மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து LNG வாங்கும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த மாற்றங்கள் உடனடியாக செய்ய வேண்டியதால் கூடுதல் செலவுகள் ஏற்படும். இதேபோல் வெறும் 11 நாட்களில் 40 சதவீத மின்சார உற்பத்தி இடைவெளியை சமன் செய்ய முடியுமா என்பது அடுத்த முக்கியமான கேள்வி. இந்த கேள்விக்கு விடை கிடைக்காவிட்டால் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு பாதிக்கப்படும்.
தைவான் அடுத்தக்கட்ட திட்டம்
செமிகண்டக்டர் சிப் உலக நாடுகளின் இயக்கத்திற்கு முக்கியம் தான், ஆனால் தைவானுக்கு அதைவிட முக்கியம் அந்நாட்டின் மக்கள். மின்சார் உற்பத்தி போதுமானதாக இல்லாத பட்சத்தில் மக்களுக்கான மின்சார தேவையை தான் முதலில் தைவான் அரசு பூர்த்தி செய்யும். இதன் காரணமாக உற்பத்தி துறை பாதிக்கப்படலாம்.
அப்படி பாதிக்கப்பட்டால் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு காட்டாயம் சில நாட்களுக்கு தடைபட வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஏஐ, கிளவுட் சேவை காரணமாக சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் சப்ளை செய்ய முடியாத நிலை உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் மின்சாரம் தடைப்பட்டால் மொத்த உற்பத்தியும் பாதித்து விலை தாறுமாறாக உயரும். இதனால் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், கார்கள், தொழில்துறை இயந்திரங்கள் என அனைத்தும் விலை உயரும்.
More From GoodReturns

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும்? – அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

முதல்ல LPG சிலிண்டரை சரண்டர் செய்யவும்.. அரசின் உத்தரவால் அதிர்ச்சி.. யாருக்கெல்லாம் சிக்கல்..?!

அதிகரிக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு: கடைவீதிகளில் தேடி தேடி இந்த பொருளை வாங்கும் மக்கள்!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா..! கொந்தளிக்கும் ஈரான்..! 2ஆவது வாரத்தில் ஈரான் போர்..!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

எல்பிஜி தட்டுப்பாடு: ரயில் பயணிகளுக்கு உணவு விநியோகத்தில் சிக்கலா? IRCTC வெளியிட்ட புது அறிவிப்பு

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!



Click it and Unblock the Notifications


