இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ரயில் டிக்கெட் சேவை மட்டும் அல்லாமல் இந்திய மக்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சுற்றுலா சேவை அளித்து வருகிறது. இதன் அடிப்படையில் குடியரசு தினத்தை முன்னிட்டு துபாய்-க்கு சிறப்பு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து 4 இரவுகள், 5 நாட்கள் கொண்ட இந்த பயணம் ஒரு நபருக்கு ரூ.94,730 என்ற விலை முதல் IRCTC அறிமுகம் செய்துள்ளது. ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், கொச்சி, சென்னை ஆகிய நகரங்களிலிருந்து மக்கள் இத்திட்டத்தை தேர்வு செய்து பயணிக்கலாம்.

சென்னை விமானம் நிலையம்
சென்னையிலிருந்து இதன் விலை ஏறத்தாழ ரூ.96,500 ஆக உள்ளது. சென்னையில் இருந்து ஜனவரி 21 ஆம் தேதி ஷார்ஜா-க்கு விமானம் புறப்படுகிறது. இதேபோல் ஷார்ஜாவில் இருந்து 26ஆம் தேதி விமான புறப்படுகிறது. விமானத்தின் பயண நேரம் கிட்டத்தட்ட 3 மணிநேரமாகும்.
கட்டணம் விபரம்
சென்னையில் புறப்படும் பயணிகளுக்கு கட்டணம் நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாறுப்படுகிறது. ஒரு நபர் மட்டும் என்றால் 1,17,250 ரூபாய், இதுவே 2 பேர், 3 பேர் என்றால் 96500 ரூபாயாகும். மேலும் குழந்தைகள் அதாவது 2-11 வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், படுக்கை வேண்டுமெனில் 94,850 ரூபாய், படுக்கை வேண்டாமெனில் 86,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்னவெல்லாம் கிடைக்கும்
இந்த டூர் பேகேஜில் நாட்டில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயணிகளை ஒரே குழுவாக இணைத்து செயல்படுத்தும் திட்டமாகும். இந்த டூர் பேகேஜ்-ல் விமான டிக்கெட், மூன்று நட்சத்திர ஹோட்டல் தங்குமிடம், விசா செலவு, உணவு, ஏசி பஸ்ஸில் சுற்றுலா, பாலைவன சஃபாரி, பயண காப்பீடு ஆகியவை அடங்கும்.
முக்கிய இடங்கள்
இந்த டூர் பேகேஜ்-ல் பாம் ஜுமேரா, மிராக்கிள் கார்டன், புர்ஜ் அல் அரப், தங்கம் மற்றும் மசாலா சந்தைகள், புர்ஜ் கலீஃபாவில் ஒளி ஒலி நிகழ்ச்சி ஆகியவை அடங்கும். மேலும் துபாய் கோல்டு மார்கெட்டில் ஷாப்பிங் மற்றும் அபுதாபியில் ஒரு நாள் முழுவதும் சுற்றுலா ஆகியவையும் இதில் அடங்கும்.
ஐரோப்பா சுற்றுலா அறிவிப்பு
IRCTC அமைப்பு துபாய் சுற்றுலா போல் 13 நாள் ஐரோப்பா சுற்றுலா பேகேஜ்-ஐ அறிவித்துள்ளது. பல நாடுகளை உள்ளடக்கிய இந்த பயணம் ஜெய்ப்பூரிலிருந்து ஏப்ரல் முதல் ஜூன் வரை தொடங்கும். இது சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக ஐஆர்சிடிசி செய்துள்ளது.
More From GoodReturns

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!

துபாய் வாழ் இந்தியர்களுக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பதிவு செய்ய சொல்கிறதா இந்திய தூதரகம்? உண்மை என்ன?

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் சிக்கிதவிக்கும் மக்களுக்கு குட்நியூஸ்.. தாய் நாட்டுக்கு கிளம்ப ரெடியாக இருங்க..!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

துபாயில் சிக்கிதவிக்கும் பிரலங்கள்.. அமைச்சர் முதல் அஜித் குமார், நர்கிஸ் ஃபக்ரி வரை.. பெரிய லிஸ்ட் இருக்கு



Click it and Unblock the Notifications