ரயில்கள் தனியார் மயமாக்க கூடாது என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கோவையில் இருந்து ஷீரடி வரை தனியார் ரயில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கோவையிலிருந்து ஷீரடிக்கு நேரடி ரயில் விட வேண்டும் என பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். அந்த வகையில் தற்போது கோவை முதல் ஷீரடி வரை தனியார் சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் 'பாரத் கவுர்' என்ற திட்டத்தின் கீழ் கோவை உள்பட 5 நகரங்களில் இருந்து ஷீரடிக்கு தனியார் ரயில் இயக்குவதற்கு ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. கோவையில் இருந்து ஷீரடிக்கும், ஷீரடியில் இருந்து கோவைக்கு வாரம் ஒருமுறை இந்த ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலாயா வழியாக செல்வதால் அங்கு செல்லும் பக்தர்களுக்கும் இந்த ரயில் வசதியாக இருக்கும். இந்த ரயில் தூய்மையாகவும் சர்வதேச தரத்தில் விருந்தோம்பலும் இருக்கும் என்றும் முதல் ரயில் 1,100 பேர் பயணம் செய்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ரயில் கோவை வடக்கு பகுதியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.25 மணிக்கு ஷீரடி நகரை வந்தடையும். ஒரு நாள் இடைவெளிக்கு பின்னர் ஷீரடியில் இருந்து கோவைக்கு கிளம்பும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பெங்களூர், தர்மபுரம், மந்திராலயா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.
இந்த ரயிலுக்கான கட்டணம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட் ரூ.2500, 3 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கு ரூ.5000, 2 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கு ரூ.7000, முதல் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கு ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயிலில் அனுபவமுள்ள ஹவுஸ் கீப்பிங் ஊழியர்களால் பராமரிக்கப்படுகிறது என்றும் பயணிகள் பயன்படுத்தும் பகுதிகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய சைவ உணவுகள் அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு பயணிகளுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் தனியார் ரயில் இயக்கப்படுவதற்கு ரயில்வே ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications