மருத்துவ பாலிசிகளின் மூலம் கொரோனா சிகிச்சை செலவுகளையும் கவர் செய்யுமாறு பாலிசிகளை உருவாக்குமாறு IRDAI, இன்சூரன்ஸ் நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
தேவை அடிப்படையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை காப்பீட்டாளர்கள், புதிய பாலிசிகளை அறிமுகம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய ஒழுங்கு முறை காப்பீட்டு ஆணையம், கொரோனா வைரஸிற்கான செலவுகளையும் உள்ளடக்கிய பாலிசிகளை வடிவமைக்க அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா செலவையும் கவர் செய்யுங்கள்
மருத்துவமனையில் சேர்க்கும் செலவை ஈடு செய்யும் தற்போதைய தயாரிப்புகளில், கொரோனா வைரஸ் தொடர்பான வழக்குகள் விரைவாக தீர்க்கப்படுவதை காப்பீட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதையும் கட்டுப்பாட்டாளர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் சிகிச்சையின் போது ஏற்றுக் கொள்ளக் கூடிய மருத்துவ செலவினங்கள், தனிமைப்படுத்தப்பட்ட காலம் உட்பட, கொள்கை ஒப்பந்தத்தின் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு ஏற்ப தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
க்ளைம் செய்து கொள்ளலாம்
எந்தவொரு கோரிக்கையையும் மறுப்பதற்கு முன், காப்பீட்டாளர்களின் உரிமைக்கோரல் மறு ஆய்வுக் குழுவால் உரிமை கோரல்களை முழுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என கட்டுபாட்டாளர் சுட்டிக் காட்டியுள்ளார். எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மறுகாப்பீட்டுத் தலைவர் சுப்பிரமணியம் பிரம்ம ஜோசியுலா கூறுகையில், சம்பந்தபட்ட நபர் குறைந்தது 24 மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், கொரோனா வைரஸ் காரணமாக உரிமைக் கோரல்கள் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
தொற்று நோயாக அறிவிக்கப்பட்டால் க்ளைம் செய்ய முடியாது
இந்திய அரசாங்கத்தால் கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோயாக அறிவிக்கப்பட்டால், பல சுகாதாரக் காப்பீட்டுக் கொள்கைகளின் கீழ் இந்த உரிமை கோரல்கள் விலக்கப்படலாம். அதாவது பாலிசிகளை க்ளைம் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் டிஜிட்டல் இன்சூரன்ஸ் ஏற்கனவே ஒரு தயாரிப்புடன் வந்துள்ளது. இது ஒரு நபருக்கு வைரஸூக்கு எதிராக காப்பீடு செய்யும். இதில் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையில் கவர் செய்ய முடியும்.
விரைவில் இதுபற்றி கலந்து கொள்ளுங்கள்
மேலும் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று 28 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன. கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளிப்பதற்கான உரிமை கோரல்களில் விரைவாக கலந்து கொள்ளுமாறும் இந்தியா காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் காப்பீட்டாளர்களைக் கேட்டுள்ளது.