சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.1 கோடி ரூபாய் சம்பாதிப்பது என்பது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. அது, நிதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அந்த சம்பளம் வாங்குபவர் பெரிய வெற்றியை பெற்றுவிட்டார் என்பதற்கான அடையாளமாக இருந்தது. ஆனால், ஐஐஎம் அகமதாபாத்தின் முன்னாள் மாணவரான அனுராக் சிங்கால் வெளியிட்ட பதிவின்படி, மும்பையில் ஆண்டுக்கு ரூ.1 கோடி ரூபாய் சம்பளத்தின் உண்மையான மதிப்பு குறித்து முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார். ஒரு காலத்தில் நிதி வெற்றியின் உச்சமாகக் கருதப்பட்ட இந்த எண்ணிக்கை, இப்போது நகரத்தின் உயரடுக்கு வட்டாரங்களில் அரிதாகவே பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
மும்பையில் ஆண்டுக்கு ரூ.1 கோடி ரூபாய் சம்பளம் என்பது பெருமைக்காக கத்தி சொல்லும் அளவிற்கு இல்லை. இது மும்பை போன்ற நகரங்களில் ஒரு எண்ணிக்கை மட்டுமே என்று அனுராக் சிங்கால் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ரூ.1 கோடி சம்பளம் பெறுபவர்கள் இந்தியாவில் வருமானம் ஈட்டுபவர்களில் முதல் 0.1% பேரில் ஒருவராக ஆக்குகிறது. 2023 எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, முதல் 1% பேரை வரையறுக்கும் ரூ.50 லட்சத்தை விட இது மிக அதிகம் என்று அவர் கூறினார்.

சராசரியாக ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.6 முதல் 8 லட்சம் சம்பாதிக்கும் ஒரு நகரத்தில் 2024 ஐஐஎம் ஆய்வின்படி ரூ.1 கோடி என்பது மிகப்பெரியதாகத் தோன்றும். இது நகர சராசரியை விட சுமார் 12 முதல் 15 மடங்கு அதிகம் என்றே சிங்கால் கூறியுள்ளார். ஆனால் இங்கேதான் விஷயமே உள்ளது, மும்பையில் உள்ள சூழ்நிலை மிக முக்கியமானது. நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள், உங்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பது நீங்கள் எவ்வளவு பணக்காரராக உணர்கிறீர்கள் என்பதை முற்றிலுமாக மாற்றும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
ரூ.1 கோடி சம்பளத்தின் 'கரையக்கூடிய' தன்மை: ஆண்டுக்கு ரூ.1 கோடி ரூபாய் சம்பாதிப்பது இந்திய வருமானம் ஈட்டுபவர்களில் முதல் 0.1% பேரில் உங்களைச் சேர்த்தாலும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்குப் பெயர் பெற்ற மும்பை போன்ற ஒரு நகரத்தில், இந்த பெரிய வருமானம் விரைவில் கரைந்துவிடும். உயர் ரகப் பகுதியில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுப்பதற்கு மாதத்திற்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவாகும்.புதிய வருமான வரி விதிப்பின் கீழ், உங்கள் வரிச் செலவு மட்டும் ஆண்டுக்கு ரூ.38 லட்சத்தைத் தாண்டும் என்று சிங்கால் கூறுகிறார்.
மேலும், சர்வதேசப் பள்ளிக் கட்டணமாக ஆண்டுக்கு சுமார் ரூ.5 லட்சம், சுற்றுலாவுக்கு ரூ.10,000 வரை வழக்கமான சாப்பாட்டுச் செலவுகள், குடும்ப விடுமுறைக்கு ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் செலவாகும். எனவே அந்த ரூ.1 கோடி ரூபாய் அவ்வளவு பெரிய தொகையாகத் தெரியவில்லை. இது உறுதியானது, ஆனால் படகு வாங்கும் பணத்திற்கு அல்ல என்று சிங்கால் குறிப்பிட்டார். அதாவது, இது வசதியான வாழ்க்கைக்கான பணம், ஆனால் ஆடம்பரமான கனவுகளை நிறைவேற்றும் அளவுக்குப் பெரிய தொகையல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இடம் சார்ந்த செல்வம்: தெற்கு மும்பை vs புறநகர் பகுதிகள்: இருப்பினும், போரிவலி அல்லது தானே போன்ற புறநகர்ப் பகுதிகளில், ரூ.1 கோடி சம்பளம் இன்னும் ஒருவரைத் தனித்து நிற்கச் செய்யலாம். ஆனால் நிதி மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகள் அடிக்கடி ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பாதிக்கும் தெற்கு மும்பையின் (South Mumbai) நிர்வாகக் குழு அறைகளில், இந்த வருமானம் சராசரியாகவே காணப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். நைட் ஃபிராங்க் (Knight Frank) நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த நகரம் 20,000 க்கும் மேற்பட்ட மிக உயர்ந்த நிகர மதிப்புள்ள நபர்களை (UHNIs - Ultra High Net Worth Individuals) கொண்டுள்ளது. இதனால், வெறும் வருமானம் இனி திகைப்பூட்டும் வகையில் இருக்காது என்று கூறியுள்ளது. அதேபோல், சிங்கால் சம்பளத்தை தாண்டி, செல்வம்தான் அங்கு உண்மையான நெகிழ்வுத்தன்மையாக இருக்கும் என்று கூறினார்.
அதாவது, சிங்கலின் நுண்ணறிவுகள் செல்வம் குறித்த மாறிவரும் கருத்துக்களை எடுத்துக்காட்டுகின்றன. ரூ.1 கோடி என்பது மிகப்பெரியதாக உணரப்படுகிறதா இல்லையா என்பது உண்மையில் உங்கள் வாழ்க்கை முறை, உங்கள் இருப்பிடம், உங்கள் செலவுகள் மற்றும் நீங்கள் யாருடன் உங்களை ஒப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. மாறிவரும் பொருளாதாரச் சூழலில், சம்பளத்தை விட சொத்து மதிப்பு (net worth) மற்றும் சேமிப்பு (savings) ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications