அமெரிக்க குடியுரிமை விற்பனைக்கா? டிரம்பின் $5 மில்லியன் கோல்டு கார்டு திட்டம் சொதப்பலா!!

அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் பெரிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், புதிய "கோல்டு கார்டு" திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம், $5 மில்லியன் கட்டணம் செலுத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நேரடியாக நிரந்தர குடியுரிமை பெற முடியும். இது, தற்போதுள்ள கிரீன் கார்டு முறையிலிருந்து மிகவும் வித்தியாசமானதாகும்.

நிலையான குடியுரிமை பெறுவதற்கு தற்போதுள்ள முறைகளில் வேலைவாய்ப்பு, முதலீடு, குடும்ப ஆதரவு போன்ற காரணங்களின் அடிப்படையில் அமெரிக்கா குடியேற்ற அனுமதி வழங்குகிறது. ஆனால், டிரம்பின் புதிய திட்டம், பணக்கார முதலீட்டாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கிறது. ஒருவேளை, வெறும் பணம் இருந்தால் மட்டுமே அமெரிக்காவில் குடியேற முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்க குடியுரிமை விற்பனைக்கா?  டிரம்பின் $5 மில்லியன் கோல்டு கார்டு திட்டம் சொதப்பலா!!

கிரீன் கார்டுக்கு, பெரும்பாலும் குடும்ப ஆதரவு, வேலைவாய்ப்பு, முதலீடு போன்ற காரணங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. பல நிலைகளில் இருந்து விண்ணப்பிக்கவும். அத்துடன், பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் தங்க அட்டைக்கு, எந்தவிதமான வேலைவாய்ப்பு நிபந்தனையும் இல்லாமல், $5 மில்லியன் கட்டணம் செலுத்தினால் உடனடியாக குடியுரிமை கிடைக்கும்.

EB-5 கிரீன் கார்டுக்கு, முதலீட்டாளர்கள் $800,000 முதல் $1.05 மில்லியன் வரை முதலீடு செய்ய வேண்டும். மேலும், குறைந்தது 10 வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தங்க அட்டைக்கு எந்த ஒரு வேலைவாய்ப்பு நிபந்தனையும் இல்லை. வெறும் $5 மில்லியன் செலுத்தினால் போதுமானது. கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, சில குற்றச்சாட்டுகளுக்குள் வந்தால், நாடு கடத்தப்படும் ஆபத்து இருக்கிறது. தங்க அட்டை வைத்திருப்பவர்களுக்கு, ஏற்கனவே நேரடி குடியுரிமை கிடைக்கும் என்பதால், நாடு கடத்தல் அல்லது குடியுரிமை ரத்து செய்யும் ஆபத்து குறைவாக இருக்கும்.

EB-5 முதலீட்டாளர் விசா திட்டம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது. ஆனால், டிரம்பின் தங்க அட்டை வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற எந்த ஒரு நிபந்தனையும் கடைப்பிடிக்கவில்லை. இதன் மூலம், அமெரிக்கா பணக்கார முதலீட்டாளர்களை நேரடியாகக் கவரும் நோக்கத்துடன் இருக்கிறது.

இந்த திட்டம் அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கிறது. சாதாரண குடியேற்ற முறைகளில் வேலைவாய்ப்பு, குடும்ப ஆதரவு, மனிதாபிமான (Asylum) முறைகள் போன்றவற்றின் மூலம் குடியுரிமை பெற பல வருடங்கள் ஆகும். ஆனால், $5 மில்லியன் செலுத்துபவர்கள் உடனே குடியுரிமை பெறலாம் என்பதால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடியேற்றத்திற்கான வாய்ப்புகள் குறைந்து விடும்.

அமெரிக்காவில் ஏற்கனவே பணக்காரர்களுக்கு அதிக சலுகைகள் உள்ளன என்ற விமர்சனங்கள் இருக்கின்றன. இப்போது, குடியேற்றத்திற்கும் பணமே முக்கியமானது என்றால், நீதி இல்லாத ஒரு முறை உருவாகும் என்று பலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்த திட்டம் மூலம் பணக்காரர்கள் அமெரிக்காவில் சொத்துக்கள் வாங்கி குடியுரிமை பெறலாம் என்பதால், உள்நாட்டு அமெரிக்கர்களுக்கு வீட்டு விலைகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

இந்த திட்டம் குறித்து பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஏனெனில், பணக்காரர்கள் மட்டும் இலகுவாக குடியேறும் வழி கிடைப்பதால், ஏழை மற்றும் நடுத்தரவர்க்க குடியேற்றத்திற்கான வாய்ப்புகள் குறைந்து விடும். எனவே, இது அமெரிக்காவின் மொத்த குடியேற்ற அமைப்பை எவ்வாறு மாற்றும் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+