பங்களாதேஷ் பொருளாதாரம் 2017 முதல் வலுவான வளர்ச்சியை அடைந்த நிலையில் 2020 இல் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் இந்தியாவை முந்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிலையில் பங்களாதேஷ் திடீரென கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி கோரியது. இதன் அடிப்படையில் IMF பங்களாதேஷ் நாட்டிற்குச் சுமார் 4.5 பில்லியன் டாலர் அதாவது சுமார் 37,000 கோடி ரூபாய் அளவிலான மதிப்பிலான தொகையைப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவி தொகையை அளித்தது.
பங்களாதேஷ் நாட்டில் தற்போது என்ன பிரச்சனை..? 2020 இந்தியாவை ஓரம் கட்டி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ் திடிரென IMF அமைப்பிடம் அவசர நிதியுதவி கேட்க என்ன காரணம்..?
பங்களாதேஷ் அரசியல்
பங்களாதேஷ் நாட்டில் வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகளான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (BNP), நாடு முழுவதும் பல எதிர்ப்புப் பேராட்டகளைச் செய்து வருகிறது.
பிரதமர் ஷேக் ஹசீனா
இதன் மூலம் பங்களாதேஷ் அரசியலில் 10 வருடத்திற்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் அவாமி லீக் அரசாங்கத்தையும் அதன் தலைவரும் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா-வை நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
20 வருட வளர்ச்சி
பங்களாதேஷ் கடந்த 20 வருடத்தில் சிறப்பான முறையில் தனது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் காரணத்தால் GDP வளர்ச்சி அளவுகளைத் தொடர்ந்து உலக நாடுகள் வியக்க வைக்கும் அளவிற்குப் பதிவு செய்து வந்தது.
ஜிடிபி வளர்ச்சி
கோவிட் -19 தொற்றுநோயைத் பாதிப்புக் காலத்தில் இந்தியா உட்பட உலகில் பல முன்னணி நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி அதிகப்படியான சரிவை சந்தித்த நிலையில், 2020 இல் பங்களாதேஷ் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
2020 இல் பங்களாதேஷ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.4 சதவீதமாகவும், 2021 இல் 6.9 சதவீதமாகவும், 2022 இல் 7.2 சதவீதமாகவும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் பிரச்சனை வேறு இடத்தில்.
உக்ரைன் -ரஷ்யா போர்
கொரோனா தொற்றுநோய் பாதிப்பில் இருந்து பங்களாதேஷ் நாட்டின் பொருளாதார மீட்சி அடைந்தாலும் உக்ரைன் -ரஷ்யா போரின் காரணத்தால் அந்நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை வேகமாக அதிகரித்துள்ளது, அந்நிய செலாவணி இருப்பு விரைவாகச் சரிந்துள்ளது, பணவீக்கம் அதிகரிப்பு மூலம் மந்தமான வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
அமெரிக்க டாலர் - அந்நிய செலாவணி இருப்பு
இதனால் பங்களாதேஷ் நாட்டின் நாணயமாக டாகா மதிப்பு 2021-ல் அமெரிக்க டாலருக்கு எதிராக 86 டாகா-வாக இருந்தது, ஆனால் தற்போது 105 ஆகச் சரிந்துள்ளது. இது அந்நிய செலாவணி இருப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 46,154 மில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது 33,790 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
IMF நிதியுதவி
இந்த மோசமான நிலையைச் சமாளிக்கத் தான் பங்களாதேஷ் திடீரென சர்வதேச நாணய நிதியத்திடம் கடந்த மாதம் நிதி உதவி கோரியது. IMF அமைப்புப் பங்களாதேஷ் நாட்டிற்கு அளித்த 4.5 பில்லியன் டாலர் நிதியுதவி வாயிலாகத் தான் நாணய சரிவை கட்டுப்படுத்தப்பட்டது.
ஏற்றுமதி
இதேபோல் பங்களாதேஷ் நாட்டின் பொருளாதாரம் அதிகளவில் ஏற்றுமதி வர்த்தகத்தை நம்பி தான் உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு உலகளவில் டிமாண்ட் குறைந்த நிலையிலும், டாலர் ஆதிக்கம் அதிகரித்த நிலையிலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்த காரணத்தாலும் பங்களாதேஷ் அவசர அவசரமாக IMF-யிடம் கடன் வாங்க வேண்டிய நிலை உருவானது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications