சீனா அரசின் வியக்கவைக்கும் பெல்ட் & ரோடு முயற்சி (பிஆர்ஐ) தொடங்கி ஏறக்குறைய பத்து ஆண்டுகள் முழுமையாக முடிந்துள்ளது.
இந்த நிலையில் பெல்ட் & ரோடு முயற்சி திட்டம் குறித்து லண்டனைத் தளமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான Democracy Forum இந்த உலகளாவிய திட்டத்தின் ஆதாயங்கள் மற்றும் செலவுகள் குறித்து விவாதிக்க நிபுணர்கள் குழுவை ஆகஸ்ட் 25 விர்ச்சுவல் கருத்தரங்கிற்கு அழைத்தது.
இந்த முக்கியமான கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. கடைசியில் முன்வைக்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா..? 'BRI அதன் பொலிவை இழந்துவிட்டதா..? என்பது தான்.
சீனா
சீனா அரசின் பெல்ட் & ரோடு முயற்சி (பிஆர்ஐ) திட்டத்தின் மூலம் சையின்ஸ் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பிற நாடுகள் உடனான இணைப்பை மேம்படுத்தியுள்ளது. இதேபோல் வர்த்தகத்தை விரிவுபடுத்தியது மற்றும் சர்வதேச ஒத்துழைப்பைத் திறந்துவிட்டாலும், 'கடன் பொறிகள்' மற்றும் சுற்றுச்சூழல் அழிவு பெரும் பிரச்சனையாக உள்ளது.
பெல்ட் & ரோடு முயற்சி
சீனா அரசின் பெல்ட் & ரோடு முயற்சி திட்டம் மூலம் மேற்கத்திய நாடுகளின் தாக்கம் மற்றும் வர்த்தகம் இல்லாத நாடுகளைத் தனது வர்த்தகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல் அந்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது என ஹம்ப்ரி ஹாக்ஸ்லி தெரிவித்துள்ளார்.
பொற்காலம்
பெல்ட் & ரோடு திட்டம் சீனாவின் பொற்காலத்தை உருவாக்கும் இலக்கின் அடித்தளமாக விளங்கியது எனக் கூறப்பட்டாலும், சீனா-வின் செயல்பாடுகள் பல நாடுகளை அதிகப்படியான கடன் வலையில் சிக்கவைத்துத் திவாலாக்கியது என்பது தான் உண்மை. இதுவரையில் இலங்கை, நிகரகுவா மற்றும் சாலமன் தீவுகள் போன்ற நாடுகள் சீனாவின் கடனால் பாதிக்கப்பட்டு உள்ளது.
10 ஆண்டுகள்
இதேவேளையில் பெல்ட் & ரோடு திட்டம் துவங்கி 10 ஆண்டுகளுக்குப் பின் சீனா சர்வதேச நாடுகளில் செய்த முதலீடுகள் தற்போது வாராக் கடனாக மாறியுள்ளது. இது சீன பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் அதேவேளையில் சீனாவில் தற்போது ரியல் எஸ்டேட் முதல் பல துறையில் நிதி நெருக்கடி உருவாகியுள்ளது.
சிக்கல்
இதேபோல் சீனாவின் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளது, அதனால் கால தாமதம் மட்டும் அல்லாமல் சீனா செயல்படுத்தும் திட்டங்கள் மூலம் லாபம் கிடைப்பது இல்லை. இதனால் உலகின் அடுத்தப் பெரும் கடன் பிரச்சனை சீனா மூலம் உருவாகும் என ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸ் தெரிவித்தார்.
ராணுவம்
இதேபோல் சீனா இந்தப் பெல்ட் & ரோடு திட்டம் மூலம் குறுகிய காலத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை, அனைத்தும் நீண்ட காலத் திட்டம் தான். இப்படியிருக்கையில் திவாலான நாடுகளில் முதலீடு செய்த தொகையை அப்படியே விட்டுவிடாது. கட்டாயம் பெல்ட் & ரோடு திட்டத்தின் முக்கியப் பகுதியாக இருக்கும் ராணுவ சக்தியை பயன்படுத்தித் தனது திட்டத்தையோ அல்லது நாட்டையோ கையகப்படுத்த முயற்சி செய்யும் என TDF சேர்மன் Barry Gardiner கூட்டத்தின் தெரிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications