இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை ஆய்வுக் குழுவின் மைக்கேல் பத்ரா உடன் பல முன்னணி பொருளாதார வல்லுனர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில், இந்தியப் பொருளாதாரம் ஜூன் காலாண்டில் மிகவும் மோசமான பொருளாதாரச் சரிவை எதிர்கொண்ட நிலையில், தற்போது செப்டம்பர் காலாண்டிலும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் காலாண்டிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் இந்திய வரலாற்றில் முதல் முறையாக ரெசிஷன்-ஐ சந்திக்கும் மோசமான சூழ்நிலை இந்தியாவில் உருவாகும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்து மீண்டு வரும் நிலையில் ரெசிஷன் அறிவிக்கப்பட்டால், பெரிய அளவிலான பாதிப்புகளை மக்களும், பொருளாதாரமும் எதிர்கொள்ள வேண்டிய ஒரு நிலை உருவாகும்.
இந்தியாவில் ரெசிஷன் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் 2008 - 2009 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் ரெசிஷன் காரணமாக இந்தியாவில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டோம். இதைவிட அதிகமான பாதிப்பும் இந்தியாவில் தற்போது ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
ஜிடிபி வீழ்ச்சி
ரிசர்வ் வங்கி high-frequency data-ஐ பயன்படுத்தி ஆய்வு செய்து முதல் முறையாக வெளியிட்டுள்ள 'Nowcast'அறிக்கையில், செப்டம்பர் மாதம் நாட்டின் பொருளாதாரம் -8.6% வீழ்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது காலாண்டு வீழ்ச்சி
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் -24 சதவீதம் வரியில் இந்திய பொருளாதாரம் சரிந்த நிலையில், தொடர்ச்சியாக 2 காலாண்டுகளாக பொருளாதாரம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளதாகல் இந்திய பொருளாதாரம் ரெசிஷனுக்குத் தள்ளப்படும் அபாயம் நிலவுகிறது.
ரெசிஷன்
இந்த ஆய்வறிக்கையில் இந்திய பொருளாதாரம் 2020-21ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சியின் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக இந்திய பொருளாதாரம் technical recessionனுக்கு நுழைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை மற்றும் அரசின் ஒப்புதல் பெற்ற தரவுகள் வருகிற நவம்பர் 27ஆம் தேதி வெளியாகும்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் 2 காலாண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தால் ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளது என்பது பொருள்.
செப்டம்பர் காலாண்டு
இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான செலவினங்களைக் குறைத்த காரணத்திற்காகவே செப்டம்பர் காலாண்டில் அதிகளவிலான லாபம் கிடைத்துள்ளது. மேலும் 'Nowcast'ஆய்வறிக்கையில் வாகன விற்பனை முதல், வங்கி நிதி உட்செலுத்துதல் வரை அனைத்துத் தரப்பு தரவுகளையும் சேர்ந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
வளர்ச்சி பாதை
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் -24 சதவீதம் வரியில் இந்திய பொருளாதாரம் சரிந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் இதன் அளவு -8 சதவீதமாகச் சரிந்துள்ளது. இது எதிர்மறை வளர்ச்சியாகவே இருந்தாலும், வளர்ச்சி அளவீடுகள் அதிகரித்துள்ளது.
ஆபத்து
உலக நாடுகள் கொரோனா பாதிப்பின் 2வது தாக்குதலை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் உயர்வு போன்றவை முதலீட்டுச் சந்தையைப் பாதிக்க நேரிடும். இதனால் இந்திய பொருளாதார வளர்ச்சியும் மீண்டும் சரியவும் வாய்ப்புகள் உள்ளது எனவும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சவாலான காலம்
கடந்த 2 காலாண்டுகளாக இந்திய பொருளாதாரம் எதிர்கொண்ட சரிவின் எதிரொலியாக இந்திய குடும்பங்களும், நிறுவனங்களும் பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் 2வது கொரோனா பாதிப்பில் நாட்டின் நிதியியல் துறை மாபெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் எனவும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்
பிரிட்டன்
கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஜூன் காலாண்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவின் மூலம் ரெசிஷனுக்குத் தள்ளப்பட்ட பிரிட்டன் மீண்டும் ரெசிஷனுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாங்க் ஆப் இங்கிலாந்து
ஜூன் காலாண்டிலேயே ரெசிஷனுக்குத் தள்ளப்பட்ட பிரிட்டன் பொருளாதாரம், செப்டம்பர் காலாண்டிலும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்கப் பாங்க ஆப் இங்கிலாந்து சுமார் 150 பில்லியன் பவுண்ட் நிதியை பிரிட்டன் வர்த்தகச் சந்தைக்குள் செலுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2வது கொரோனா பாதிப்பு
கடந்த வாரம் வியாழக்கிழமை கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பிரிட்டன் அரசு மீண்டும் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 2 வரையில் உணவகங்கள், பார் ஆகியவை மூடப்பட உள்ளது. மேலும் மக்களுக்குத் தேவையான அடிப்படை சேவைகள் கிடைப்பதிலும் பாதிப்பும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
பிரிட்டன் பொருளாதாரம்
2020ஆம் ஆண்டின் 3 காலாண்டிலும் பிரிட்டன் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில், பிரிட்டன் மத்திய வங்கிகள் கணிப்பின் படி 4வது காலாண்டில் பிரிட்டன் பொருளாதாரம் -2 சதவீதம் வரையில் சரியும் என்று கணித்துள்ளது.
இதன் மூலம் 2020ஆம் ஆண்டில் மொத்தமாகப் பிரிட்டன் பொருளாதாரம் -11 சதவீதம் வரையில் சரியும் எனக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா
இதேபோல் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதிபர் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் போன்ற அதிரடிகள் நடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர அமெரிக்கச் செனேட் அமைப்பு சுமார் 1.4 டிரில்லியன் டாலர் அளவிலான செலவிடு திட்டத்தை முன்வைத்துள்ளது.
இதனால் அமெரிக்கா பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புமா என்பது சந்தேகமாக உள்ளது.
அப்போ இந்தியா
வல்லரசு நாடுகளில் ஒன்றாகவும், வலிமையான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாகவும் இருக்கும் பிரிட்டன் பொருளாதாரமே கடந்த 3 காலாண்டுகளாகப் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து 4வது காலாண்டிலும் சரிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில், ஏற்கனவே சரிவு பாதையில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை என்ன..?