டெல்லி: இந்திய மற்றும் அமெரிக்க வாழ்க்கை தரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் இதில் பங்கேற்று இந்திய ரியல் எஸ்டேட்டை கடுமையாக சாடியுள்ளார். Gurjot Ahluwalia என்ற நபர் எக்ஸ் பக்கத்தில் 25 கோடி ரூபாய் இருப்பவர்கள் இந்தியாவில் வீடு வாங்கலாமா அல்லது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வீடு வாங்கலாமா என்பது குறித்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 25 கோடி ரூபாய் அமெரிக்க டாலர் மதிப்பில் 3 மில்லியன் டாலர்கள் இந்த தொகை வைத்திருக்கும் ஒரு நபர் இந்தியாவில் இருந்தால் என்ன செய்யலாம்? அமெரிக்காவில் இருந்தால் என்ன செய்யலாம் என்பது குறித்து அதில் விவரித்துள்ளார்.
25 கோடி ரூபாய் இருந்தால் நீங்கள் குர்குவானில் இருப்பீர்களா அல்லது நியூயார்க்கில் இருப்பீர்களா? குர்குவானில் 4 படுக்கையறை கொண்ட வீடா அல்லது நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பா (penthouse) ? குர்குவானின் கோஃல்ப் கோர்ஸ் சாலையா அல்லது மேன்ஹேட்டன் பகுதியா?, சைபர் சிட்டியா? அல்லது டைம்ஸ் சதுக்கமா ? என பதிவிட்டுள்ளார். இத்துடன் இந்தியா மற்றும் அமெரிக்க ரியல் எஸ்டேட் தொடர்பாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்படி 25 கோடி ரூபாய் இருப்பவர்கள் டெல்லி அருகே உள்ள குர்குவான் பகுதியில் ஒரு ஆடம்பரமான கேட்டட் கம்யூனிட்டியில் நான்கு படுக்கையறை கொண்ட குடியிருப்பினை வாங்க முடியும். ஆனால் அதுவே நியூயார்க்கில் பால்கனியில் இருந்து பார்த்தால் நதிக்கரை தெரியும் அளவிற்கு ஒரு அழகிய வீட்டை வாங்கலாம் என கூறியுள்ளார். இந்தியாவில் ரியல் எஸ்டேட் மிகப் பெரிய முறைகேடாக மாறிவிட்டது எனக் கூறியுள்ளார்.
இவருடைய இந்த பதிவுக்கு பலரும் பின்னூட்டங்களை பதிவிட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் விலைகளை வேண்டுமென்றே உயர்த்தி பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக சிலர் கூறியுள்ளனர். காங்கிரஸை சேர்ந்த மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மோசமான உள் கட்டமைப்பு கொண்ட ஆனால் அதிக விலை மதிப்பு கொண்டு ரியல் எஸ்டேட் சந்தை இந்தியாவில்தான் இருக்கிறது என விமர்சனம் செய்துள்ளார்.
மற்றொரு பயனாளரோ கருப்பு பணம் வைத்திருப்பவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்கேம் தான் இந்தியாவின் ரியல் எஸ்டேட் என தெரிவித்துள்ளார். ஒரு பயனர் ஒரு மில்லியன் டாலர்கள் இருந்தாலே போதும் நீங்கள் அமெரிக்காவில் ஒரு வீட்டினை வாங்கி ராஜ வாழ்க்கை வாழ முடியும், இந்தியாவில் வீடு விற்பனை என்ற பெயரில் பகல் கொள்ளை நடக்கிறது என தெரிவித்துள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications