5 ரூபாய் நாணயங்களை ரத்து செய்கிறதா RBI..? இனி 5 ரூபாய் கிடைக்காதா?

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தடிமனான பழைய ரூபாய் 5 நாணயங்களை ரத்து செய்ததாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில தகவல்களின்படி, இந்த நாணயங்களை அச்சிடுவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

ஒரு வருடத்தில் எத்தனை நாணயங்களை அச்சடிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கிறது. இதற்குப் பிறகு, நாணயங்களை அச்சிட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அரசாங்கம் அறிவுறுத்துகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, அரசின் உத்தரவுப்படி நாணயங்களை அச்சிடுகிறது. இப்போது 5 ரூபாய் நாணையம் புழக்கத்தில் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 5 ரூபாய் நாணயங்களை ரத்து செய்கிறதா RBI..? இனி 5 ரூபாய் கிடைக்காதா?

எந்த நாணயம்/நோட்டுகளை ரத்து செய்வதற்கும் புதிய நாணயங்கள்/நோட்டுகளை வழங்குவதற்கும் ஒரு தனி செயல்முறை உள்ளது. நாணயங்களை வெளியிட அல்லது ரத்து செய்ய மத்திய அரசிடம் இருந்து ரிசர்வ் வங்கி அனுமதி பெற வேண்டும். அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகுதான் இந்திய ரிசர்வ் வங்கி நாணயங்கள்/நோட்டுகளைத் தடை செய்ய முடியும். இந்தியாவில் தற்போது 1 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ரூ.30 மற்றும் ரூ.50 நாணயங்களை புழக்கத்தில் கொண்டு வருவது குறித்து பேசப்படுகிறது.

ரூ.5 நாணயம் ரத்து என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 5-ஐ ரத்து செய்ய மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் முயற்சிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அரசு தரப்பால், ரிசர்வ் வங்கியிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

நாட்டில் தற்போது இரண்டு வகையான 5 ரூபாய் நாணயங்கள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. பித்தளை மற்றும் எஃகு நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. தற்போது 5 ரூபாய் பித்தளை நாணயங்கள் கிடைக்கின்றன. ஆனால், இப்போது ஸ்டீல் நாணயங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தற்போது மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் 5 ரூபாய் நாணயங்களை அச்சிடுவதில்லை. பித்தளை நாணயங்கள் சந்தையில் அதிகம் காணப்படுகின்றன.

5 ரூபாய் நாணயங்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது ஏன்?: 5 நாணயங்கள் அச்சடிப்பதை நிறுத்தியதற்கான காரணத்தை அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், 5 ரூபாய் நாணயங்களை பங்களாதேஷ் நாட்டிற்கு கடத்தப்பட்டு 4-5 பிளேடுகளை உருவாக்கி வருவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. அதன்பிறகு, 5 ரூபாய் நாணயங்களைக் கொண்டு பிளேடுகளை சிலர் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். 5 ரூபாய் நாணயங்களை முறைகேடாக பயன்படுத்தியதால், அவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+