ஈரான் போர் பதற்றம் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் வேளையிலும், அமெரிக்காவின் அமைதிக்கு மத்தியிலும் கத்தார் நாட்டின் செயல்பாடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு நாடான கத்தார், ஈரானின் தாக்குதலால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு பல மாதங்களாக எரிவாயு உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் கத்தார் அரசு உலக நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனது கப்பல்களை ஓவ்வொன்றாக ஹார்முஸ் வழித்தடத்தின் வாயிலாக பெர்சியன் வளைகுடாவிற்குள் நுழைய தயாராகி வருகிறது.

ப்ளூம்பெர்க் வெளியிட்டு தகவல் படி, கத்தார் நாட்டுக்கு சொந்தமான சுமார் 6 காலி எரிவாயு கப்பல்கள் தற்போது ஹார்முள் வழித்தடத்தை கடந்தும், பெர்சியன் வளைகுடா பகுதியை நோக்கியும் பயணித்து கத்தார் நாட்டின் துறைமுகத்திற்கு சென்று வருகிறது.
பிப்ரவரி மாதம் துவங்கிய அமெரிக்கா - ஈரான் போரில் கத்தார் நாட்டின் எரிவாயு உற்பத்தி தளங்கள் ஏவுகணை தாக்குதல் மூலம் பெரும் சேதம் உண்டாகியது, இதை தொடர்ந்து ஜூலை மாதம் கத்தார் நாட்டின் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இருந்து எரிவாயு உற்பத்தியும் சரி, கப்பல் போக்குவரத்தையும் சரி மொத்தமாக நிறுத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை துரிதப்படுத்திய கத்தார், மிகப்பெரிய நடவடிக்கையாக 6 காலி கப்பல்களை அழைத்துள்ளது.
இதேவேளையில் செப்டம்பர் மாத துவக்கத்தில் கத்தார் அரசு அமெரிக்காவிடம் ஈரான் உடன் பேச்சுவாத்தையை துவங்க கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அமெரிக்கா எவ்விதமான முயற்சிகளை எடுக்காவில்லை, ஆனால் டிரம்ப் ஈரான் உடனான போரை நிறுத்திக்கொண்டு பொருளாதார தடைகள் மூலம் ஈரானை முடக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதன் பின்பு கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவின் தாக்குதல் அளவும், வேகமும் குறைந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தான் கத்தார் தனது ஏற்றுமதியை மீண்டும் முழு வேகத்தில் தொடர்வதற்கான பணிகளை துவங்க முடிவு செய்து 6 கப்பல்களை அழைத்துள்ளது. ஹார்முஸ்-ல் தடை செய்யப்பட்ட பகுதிகளை ஈரான் அறிவிக்க திட்டமிட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில், கத்தாரின் செயல்பாடுகள் போர் முடிந்து, முழு ஏற்றுமதிக்கு தயாராகி வருகிறதா அல்லது ஈரான் உடன் தனி ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு உள்ளதா என பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையில் கடந்த 2-3 மாதங்களாக கத்தார் குவைத்திற்கு எரிவாயு சப்ளை செய்து தனது சேமிப்பு இருப்பை மேப்படுத்தி வருகிறது. இதன் மூலம் கத்தார்எனர்ஜி தனது உற்பத்தி மற்றும் சப்ளையை நிலை நிறுத்தும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
