அதிக வரி செலுத்துவோர், தாங்கள் கட்ட வேண்டிய வருமான வரியை குறைக்க பல புதுமையான வழிகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சிலர் தங்கள் பணத்தை வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி, அதன் மூலம் வரும் வருமானத்திற்கு வரி விலக்கு பெற முடியுமா என்று பார்க்கின்றனர்.
இதில், கணவர் தனது மனைவிக்கு ஒரு தொகையை மாற்றினால், அதனால் வரி சேமிப்பு கிடைக்குமா? மாற்றப்பட்ட அந்தப் பணத்தை முதலீடு செய்வதால் வரும் லாபத்திற்கு யார் வரி செலுத்த வேண்டும்? இது குறித்து வரிச் சட்ட வல்லுநர் கரண்ஜோத் சிங் குரானா அவர்கள் விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

மனைவி கணக்கிற்கு பணம் மாற்றுவது சட்டப்பூர்வமானதா?: வருமான வரி விதிகளின்படி, கணவர் தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றுவதற்கு எந்தச் சட்ட தடையும் இல்லை. மேலும், இந்தப் பணத்தை கணவர் தனது வரி செலுத்திய வருமானத்தில் இருந்து மாற்றுவதால், மனைவியால் பெறப்படும் இந்த தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின்படி வரி விதிக்கப்படாது. எனவே, கணவர் தனது மனைவிக்கு செய்யும் எந்தவொரு பணப் பரிமாற்றமும் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒரு செயல்பாடுதான்.
வரி செலுத்துவது கணவர்தான் : கணவன் - மனைவிக்கு இடையே பணம் கைமாறப்படுவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டாலும், இங்கே ஒரு முக்கிய வருமான வரி விதி குறுக்கிடுகிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 64(1)(iv)-இன் கீழ், வருமானம் சேர்த்தல் அல்லது கிளப்பிங் (Clubbing of Income) என்ற விதி உள்ளது.
இந்த விதியின்படி, கணவர் தனது மனைவிக்கு அன்பளிப்பாக மாற்றிய பணம் அல்லது சொத்துக்களின் மூலம் மனைவிக்கு ஏதேனும் கூடுதல் வருமானம் அல்லது லாபம் வந்தால், அந்த வருமானம் மனைவியின் வருமானமாக கருதப்படாது. மாறாக, அந்த லாபத்தை, பணத்தை மாற்றிய கணவரின் வருமானத்துடன் சேர்த்து, அவருக்கே வரி விதிக்கப்படும். மனைவி இந்த வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
முதலீட்டு வருமானத்தின் நிலை என்ன..?: உதாரணமாக, கணவர் கொடுத்த பணத்தை கொண்டு மனைவி தன் பெயரில் பங்குகள், கடன் பத்திரங்கள் அல்லது வங்கி நிலையான வைப்பு நிதித் திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் வட்டி அல்லது லாபம் ஈட்டினால் என்ன நடக்கும்?
அந்த முதலீடுகளின் மூலமாகக் கிடைக்கும் வட்டி அல்லது லாபத்தை, வருமான வரி கணக்கீட்டு நோக்கங்களுக்காக, கணவரின் வருமானத்துடன் சேர்த்து, அதற்குரிய வரியை கணவரே செலுத்த வேண்டும். மனைவியின் தனிப்பட்ட வருமானத்துடன் இது சேர்க்கப்படாது.
அதாவது, ஒரு நபர் வரியை சேமிக்கும் நோக்கில் தனது மனைவிக்கு பணத்தை மாற்றினாலும், அந்தப் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்தும் பொறுப்பு, கணவருக்கே உண்டு. இதன் முக்கிய நோக்கம், வரி ஏய்ப்புக்காக ஒருவரது வருமானத்தை உறவினர்களின் கணக்கிற்கு மாற்றுவதை தடுப்பதே ஆகும். இங்கே குறிப்பிட வேண்டிய ஒரே விதிவிலக்கு என்னவென்றால், பிரிந்து வாழும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சொத்துக்கள் மாற்றப்பட்டால் மட்டுமே இந்தக் 'கிளப்பிங்' விதி பொருந்தாது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications