உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் பரபரப்பான அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரம் அதிரடியாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் நடக்கும் ஆட்சி மாற்றம் அமெரிக்க மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலகளாவிய மக்களுக்கு முக்கியமானதா விளங்குகிறது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும், வலிமைமிக்க நாடுகளின் நடப்பு நாடாகவும் இருக்கும் அமெரிக்காவில் நடக்கும் ஆட்சி மாற்றம் சர்வதேச முதலீட்டுச் சந்தைகள் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி கொண்டது.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டிப்போட்டு வரும் வேளையில், இருவருக்கும் வெற்றி வாய்ப்புகள் என்று இந்த தேர்தலுக்கான பிரச்சார காலத்தில் தொடர்ந்து மாறி வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் அமெரிக்காவில் ரெசிஷன் வருமா என்ற கேள்வி மிகவும் முக்கியமானதாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருவதற்கு முன்னதாக, உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக்ஸ்டோன் சிஇஓ ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன், அமெரிக்காவில் ரெசிஷன் ஏற்பட வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
பிளாக்ஸ்டோன் சிஇஓ ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன் ப்ளூம்பெர்க் பத்திரிக்கைக்குப் பேட்டி அளிக்கையில், அமெரிக்காவில் மந்தநிலை நிலவுகிறதா? என்ற கேள்விக்கு மிகவும் தெளிவான பதிலைக் கொடுத்துள்ளார். இந்த அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ரெசிஷன் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் வலுவாக உள்ளது, மற்றும் அதிபர் தேர்தலில் போட்டிப்போடும் கமலா ஹாரீஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகிய இரு வேட்பாளர்களும் பொருளாதாரத்தை மேம்படுத்த அதிகப்படியான ஊக்கமளிக்கும் கொள்கைகளைத் தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டு உள்ளனர் என்று பிளாக்ஸ்டோன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன் ப்ளூம்பெர்க் பேட்டியில் கூறினார்.
இதனால் அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அமெரிக்கா ரெசிஷனை தவிர்க்கும் என்று ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன் உறுதியாகக் கூறினார். டோக்கியோவில் நடந்த ப்ளூம்பெர்க் நேர்காணலில் 77 வயதான பிளாக்ஸ்டோன் சிஇஓ ஸ்டீவ் ஸ்வார்ஸ்மேன் புதன்கிழமை இதைக் கூறினார்.
ஆனால் கலத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த அதிபராக வேண்டும் என்பதற்காக 3 முக்கியமான கொள்கைகளைத் தொடர்ந்து தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டு வருகிறார். 1.அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளை மாற்றியமைப்பதில் உறுதிப்பாட்டை என்னுடைய அரசு கொண்டிருக்கும் என வலியுறுத்தியுள்ளார், 2.வரி குறைப்புகளுக்கு உறுதியளித்தார் 3. வெளிநாட்டுப் பொருட்கள் மீது அபரிமிதமான கட்டணங்கள் விதிக்கப்படும் என்பதைத் தொடர்ந்து கூறிவருகிறார்.
இதனால் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவில் பணவீக்க அளவுகள் அதிகரிக்கும் என்று பல பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர், அமெரிக்கப் பொருளாதாரம் அதிகப்படியான கடனுடன் ஏற்கனவே பலவீனமான நிலையில் இருந்து ஸ்திரமின்மைக்கு மாறி வரும் வேளையில், இவருடைய ஆட்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனாலேயே அமெரிக்காவில் ரெசிஷன் வரும் எனப் பேச்சுக்கள் தொடர்ந்து அடிப்பட்டு வருகிறது.
More From GoodReturns

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications