இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் ஒரே மகளான ஈஷா அம்பானி-க்கு நவம்பர் 19 ஆம் தேதி டிவின்ஸ் குழந்தைகள் பிறந்துள்ளது.
எப்படி முகேஷ் அம்பானி - நீதா அம்பானிக்கு ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி டிவின்ஸ் குழந்தைகளாகப் பிறந்தனரோ அதேபோல் ஈஷா அம்பானிக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறந்துள்ளனர்.
இணையம் முழுவதும் டிராண்டான இஷா அம்பானி குழந்தைகளின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
ஈஷா அம்பானி
ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமல் ஆகியோர் டிசம்பர் 2018 இல் பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். 31 வயதாகும் ஈஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
ஆனந்த் பிராமல்
அதே நேரத்தில் அவரது கணவர் ஆனந்த் பிராமல், பிராமல் குழுமத்தின் நிதிச் சேவை வணிகங்களை நடத்தி வருகிறார். ஈஷா அம்பானி - ஆனந்த் பிராமல்-க்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் நவம்பர் 19 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பிறந்த பெண் குழந்தைக்கு ஆதியா என்றும், ஆண் குழந்தைக்கும் கிருஷ்ணா என்றும் பெயரிட்டு உள்ளனர்.
முதல் பேரன் பிருத்வி
முகேஷ் அம்பானி வீட்டில் டிசம்பர் 2020ல் ஈஷா அம்பானி உடன் பிறந்த ஆகாஷ் அம்பானிக்குப் பிருத்வி என்ற ஆண் குழந்தை பிறந்த நிலையில் முதல் முறையாகத் தாத்தா-வான முகேஷ் அம்பானி பேரனுக்காகப் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து hamleys என்னும் பழமையான மற்றும் பாரம்பரியமான பொம்மை நிறுவனத்தை வாங்கினார்.
ஆதியா மற்றும் கிருஷ்ணா
இந்நிலையில் தற்போது ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த பிராமல் ஆகியோரின் குழந்தைகளான ஆதியா மற்றும் கிருஷ்ணா ஆகியோரின் சொத்து மதிப்பு என்ன என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது. இதற்கான விடையைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
100 மில்லியன் டாலர்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் சொத்துக்களைத் தனது 3 பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானிக்கு பிரித்துக்கொடுக்காத நிலையில் ஈஷா அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலராக உள்ளது. இந்த 100 மில்லியன் டாலரும் அவருடைய தனிப்பட்ட சொத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜய் பிராமல் சொத்து மதிப்பு
இதேவேளையில் ஆனந்த் பிராமல், பிராமல் குழுமத்தின் வாரிசாக இருக்கும் நிலையில், அவருடைய தந்தை உருவாக்கிய அஜய் பிராமல் உருவாக்கிய பிராமல் குரூப் மூலம் அஜய் -யின் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலராக உள்ளது. இதன் மூலம் அஜய் பிராமல் இந்தியாவின் 62வது பணக்காரராக உள்ளார்.
3 அல்லது 4 பாகங்கள்
இந்த நிலையில் முகேஷ் அம்பானி தனது சொத்து மதிப்பை 3 அல்லது 4 பாகங்களாகப் பிரித்தால் ஈஷா அம்பானி 22 முதல் 33 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு பெறுவார். 3 ஆகப் பிரித்தால் ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, அனந்த் அம்பானி பெறுவார்கள். 4 ஆகப் பிரித்தால் ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, அனந்த் அம்பானி ஆகிய 3 பிள்ளைகளும், நீதா அம்பானி - முகேஷ் அம்பானியும் இணைந்து 4வது பங்கை பெற வாய்ப்புகள் உள்ளது.
ஆதியா மற்றும் கிருஷ்ணா பத்துமதிப்பு
இதன் மூலம் ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த பிராமல் ஆகியோரின் குழந்தைகளான ஆதியா மற்றும் கிருஷ்ணா ஆகியோரின் சொத்து மதிப்பு 25 முதல் 35 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இதில் பிராமல் குரூப் தலைவர் அஜய் பிராமல் சொத்து மதிப்பான 3 பில்லியன் டாலரும் அடக்கம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications