இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் மற்றும் இஸ்ரேல் பதிலடி ஆகியவை மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் திட்டமிடப்பட்ட சில முக்கிய முயற்சிகள் அனைத்தும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மத்தியில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வரும் வேளையில், கடந்த சில வருடங்களாக மிகவும் தீவிரமாக வெடிக்க துவங்கியுள்ளது.
தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு மத்தியிலான போர் ஹமாஸ் அமைப்பின் 5000 ஏவுகனை தாக்குதல் மூலம் துவங்கியது. ஹமாஸ் அமைப்பின் இந்தத் திடீர் தாக்குதல் 2021 இல் இஸ்ரேலும் ஹமாஸ்-ம் 10 நாள் போருக்குப் பிறகு நடந்த மிக மோசமான சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை இயல்பாக்குவதற்கு அமெரிக்கா பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதேபோல் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் வழியாகச் பொருளாதார வழித்தடத்தை அமைக்க அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு மத்தியிலான போர் மூலம் இவ்விரு திட்டத்திலும் பெரும் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் போரை அறிவித்தது முதல் காசா பகுதி மீது குண்டுவீசி வருகிறது. மேலும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து காசா பகுதிகளுக்குள் டேங்கர், அதிநவீன ஆயுதங்கள் உடன் ராணுவ வீரர்கள் முன்னேறி வருகிறார்கள். ஹமாஸ் போராளிக்கள் அமைப்பு கடந்த சில ஆண்டுகளில் நடந்திய மிக மோசமான தாக்குதலாக இது உள்ளது.
கடந்த மாதம் டெல்லியில் உலகமே வியக்கும் வண்ணம் நடந்த ஜி20 கூட்டத்தில் தான் India-Middle East-Europe Economic Corridor (IMEC) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் இரு பிரிவுகளை அடங்கியது, கிழக்கு காரிடார் பொருளாதார வழித்தடத்தில் இந்தியா மற்றும் அரேபிய வளைகுடா பகுதியை இணைக்கிற்து. வடக்கு காரிடார் பொருளாதார வழித்தடத்தில் அரேபிய வளைகுடா பகுதியில் இருந்து ஐரோப்பாவை இணைக்கிறது.
இந்த 2 கட்ட பொருளாதார வழித்தடத்தில் பல நாடுகளின் எல்லை தாண்டும் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து வழி தடத்தை கொண்டது. IMEC வழித்தடத்தில் இந்தியாவில் துவங்கி ஐக்கிய அரபு அமிரீகம், சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல், ஐரோப்பா துறைமுகத்தில் முடிகிறது.
அமெரிக்கா IMEC வழித்தடத்தை செயல்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்க முக்கிய காரணம் சீனாவின் Belt and Road Initiative (BRI) திட்டத்திற்கு இத்திடம் இருக்க வேண்டும் என்பது தான். இதன் மூலம் சர்வதேச சப்ளை செயினில் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளும், அதற்கு ஆதரவாக இருக்கும் நாடுகளும் ஆதிக்கம் செலுத்த முடியும்.
இந்த மாபெரும் திட்டத்தில் தற்போது இஸ்ரேல் போரில் மூழ்கியிருக்கும் காரணத்தால் இத்திட்டம் தோல்வியில் முடியலாம் என கூறப்படுகிறது.
தற்போது இஸ்ரேல் அரசு காசா ஸ்ட்ரிப் பகுதிக்கு மின்சாரத்தை மொத்தமாக துண்டித்துள்ளது. இதேவேளையில் ஹமாஸ் அமைப்பு தற்போது சவுதி அரேபியா, ஈரான், கத்தார் ஆகியவை ஆதரவாக குரல் கொடுத்தது.
மேலும் இந்த போர் மூலம் IMEC வழித்தடம் பாதிக்கப்பட்டது மூலம் யார் பலன் அடைவார்கள் என்றால் சீனா, துருக்கி, பாகிஸ்தான் ஆகியவை தான் என S.L. Kanthan என்பவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications