இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் மற்றும் இஸ்ரேல் பதிலடி ஆகியவை மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் திட்டமிடப்பட்ட சில முக்கிய முயற்சிகள் அனைத்தும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மத்தியில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வரும் வேளையில், கடந்த சில வருடங்களாக மிகவும் தீவிரமாக வெடிக்க துவங்கியுள்ளது.
தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு மத்தியிலான போர் ஹமாஸ் அமைப்பின் 5000 ஏவுகனை தாக்குதல் மூலம் துவங்கியது. ஹமாஸ் அமைப்பின் இந்தத் திடீர் தாக்குதல் 2021 இல் இஸ்ரேலும் ஹமாஸ்-ம் 10 நாள் போருக்குப் பிறகு நடந்த மிக மோசமான சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை இயல்பாக்குவதற்கு அமெரிக்கா பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதேபோல் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் வழியாகச் பொருளாதார வழித்தடத்தை அமைக்க அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு மத்தியிலான போர் மூலம் இவ்விரு திட்டத்திலும் பெரும் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் போரை அறிவித்தது முதல் காசா பகுதி மீது குண்டுவீசி வருகிறது. மேலும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து காசா பகுதிகளுக்குள் டேங்கர், அதிநவீன ஆயுதங்கள் உடன் ராணுவ வீரர்கள் முன்னேறி வருகிறார்கள். ஹமாஸ் போராளிக்கள் அமைப்பு கடந்த சில ஆண்டுகளில் நடந்திய மிக மோசமான தாக்குதலாக இது உள்ளது.
கடந்த மாதம் டெல்லியில் உலகமே வியக்கும் வண்ணம் நடந்த ஜி20 கூட்டத்தில் தான் India-Middle East-Europe Economic Corridor (IMEC) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் இரு பிரிவுகளை அடங்கியது, கிழக்கு காரிடார் பொருளாதார வழித்தடத்தில் இந்தியா மற்றும் அரேபிய வளைகுடா பகுதியை இணைக்கிற்து. வடக்கு காரிடார் பொருளாதார வழித்தடத்தில் அரேபிய வளைகுடா பகுதியில் இருந்து ஐரோப்பாவை இணைக்கிறது.
இந்த 2 கட்ட பொருளாதார வழித்தடத்தில் பல நாடுகளின் எல்லை தாண்டும் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து வழி தடத்தை கொண்டது. IMEC வழித்தடத்தில் இந்தியாவில் துவங்கி ஐக்கிய அரபு அமிரீகம், சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல், ஐரோப்பா துறைமுகத்தில் முடிகிறது.
அமெரிக்கா IMEC வழித்தடத்தை செயல்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்க முக்கிய காரணம் சீனாவின் Belt and Road Initiative (BRI) திட்டத்திற்கு இத்திடம் இருக்க வேண்டும் என்பது தான். இதன் மூலம் சர்வதேச சப்ளை செயினில் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளும், அதற்கு ஆதரவாக இருக்கும் நாடுகளும் ஆதிக்கம் செலுத்த முடியும்.
இந்த மாபெரும் திட்டத்தில் தற்போது இஸ்ரேல் போரில் மூழ்கியிருக்கும் காரணத்தால் இத்திட்டம் தோல்வியில் முடியலாம் என கூறப்படுகிறது.
தற்போது இஸ்ரேல் அரசு காசா ஸ்ட்ரிப் பகுதிக்கு மின்சாரத்தை மொத்தமாக துண்டித்துள்ளது. இதேவேளையில் ஹமாஸ் அமைப்பு தற்போது சவுதி அரேபியா, ஈரான், கத்தார் ஆகியவை ஆதரவாக குரல் கொடுத்தது.
மேலும் இந்த போர் மூலம் IMEC வழித்தடம் பாதிக்கப்பட்டது மூலம் யார் பலன் அடைவார்கள் என்றால் சீனா, துருக்கி, பாகிஸ்தான் ஆகியவை தான் என S.L. Kanthan என்பவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications