கோவிட், ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக விளங்குவது, இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியில் துவங்கியுள்ள ராணுவ தாக்குதல்கள் தான். இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு மத்தியில் வெடித்த இந்த மோசமான தாக்குதல்கள் தொடர்ந்து விரிவாக்கம் அடைந்து வரும் காரணத்தால் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் வர்த்தக அமைப்புகள் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை குறித்து சந்தை வல்லுனர்கள் கூறுகையில் இந்த தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்தால் இஸ்ரேலில் இருக்கும் வர்த்தக அமைப்புகள் தனது வர்த்தகத்தை இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இஸ்ரேல் நாட்டில் தற்போது இயங்கி வரும் டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் தங்களுடைய வர்த்தகத்தை இந்தியாவுக்கோ அல்லது பிற நாடுகளுக்கோ மாற்ற உள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை மூலம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் இன்டெல், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற சுமார் 500க்கும் அதிகமான MNC நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும் R&D சென்டர்களை வைத்துள்ளது. இஸ்ரேலில் இருக்கும் இந்த 500 வெளிநாட்டு நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். அமெரிக்க சிலிக்கான் வேலி-க்கு அடுத்தாக அதிக மதிப்புடைய டெக் சந்தையாக இஸ்ரேல் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் நாட்டில் ஸ்டார்ட்அப் காலச்சாரம் அமெரிக்காவில் உருவான இதே காலக்கட்டத்தில் உருவான காரணத்தால் பல தொழில்நுட்பத்தில் வியக்க வைக்கும் சேவைகள் இஸ்ரேலில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை சுதாரித்துக்கொண்ட அமெரிக்க டெக் சாம்ராஜ்ஜியங்கல் இஸ்ரேல் நிறுவனங்களை கைப்பற்றி அலுவலகத்தையும், வர்த்தகத்தையும் அந்நாட்டில் துவங்கியது.
இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை காரணமாக தற்போது இஸ்ரேல் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதே டைம் சோனில் இருக்கும் நாடுகளுக்கு வர்த்தகத்தை மாற்றியும், ஊழியர்களுக்கு பிஸ்னஸ் கன்டினியூட்டி பிளான் கொண்டு வரவும் தேவை உருவாகியுள்ளது.
இதேவேளையில் இந்தியா உட்பட பல நாடுகள் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் தங்கள் நாட்டைவர்களை திரும்ப அழைக்க முடிவு செய்து மீட்டு பணிகளை துவங்கியுள்ளனர். இதனால் இஸ்ரேல் அலுவலகம், வர்த்தகத்தை சார்ந்து இருக்கும் வெளிநாட்டு வர்த்தகங்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் வர்த்தக பாதிப்புகளை எதிர்கொள்ளும் என ஐடி ஆராய்ச்சி அமைப்பான எவரெஸ்ட் குரூப் தலைவர் Peter Bendor-Samuel தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் தற்போது பாதுகாப்பு, R&D, cybersecurity, ஆட்டோமோட்டிவ் இன்னோவேஷன் துறையில் அசத்தி வரும் நாடாக உள்ளது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications