இஸ்ரேல் நாட்டின் முக்கியமான ஹைஃபா துறைமுகத்தைக் கையகப்படுத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதானி குழுமம் 1.2 பில்லியன் டாலர்களை முழுமையாகச் செலுத்தியுள்ளது என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் புதன்கிழமை தெரிவித்தார். இதுமட்டும் அல்லாமல் ஹைஃபா துறைமுகத்தின் உரிமையை அதானி போர்ட்ஸ் நிறுவனத்திற்கு இன்று அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் கொடுத்தார்.
மத்தியதரைக் கடல் அதாவது mediterranean கடல் பகுதியில் இஸ்ரேல் நாட்டிற்கு இரண்டு துறைமுகங்கள் உள்ளன, அதில் ஹைஃபா துறைமுகம் ஒன்று. இது மட்டும் அல்லாமல் இது இஸ்ரேல் அரசுக்கு மூலோபாயச் சொத்தாக விளங்கிறது. இதை இந்திய நிறுவனத்திற்கு அளிக்கிறோம் என்றால் இந்தியா மீது இஸ்ரேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என நவர் கிலோன் தெரிவித்தார்.
ஹைஃபா துறைமுகத்தின் உரிமையை அதானி போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளிப்பது மூலம் இந்தியா - இஸ்ரேல் மத்தியிலான வர்த்தகம் தொடர்ந்து அதிகரிக்கும் என நவர் கிலோன் தெரிவித்தார்.
ஹைஃபா துறைமுகம்
ஹைஃபா துறைமுகத்தின் உரிமையை அதானி போர்ட்ஸ் நிறுவனத்திற்கு இன்று அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் கொடுத்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் நாங்கள் இந்தியா நிறுவனங்களான டாடா, கல்யாணி, BHEL என 80 நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளோம்.
81 ஆக அதானி குரூப்
இந்த நிலையில் 81 ஆக அதானி குரூப்-ன் முக்கிய வர்த்தகமாக விளங்கும் துறைமுக வர்த்தகத்துடன் இணைந்துள்ளோம்.இந்தியா - இஸ்ரேல் மத்தியிலான துறைமுக வர்த்தகம் பெரிய அளவில் நன்மை அளிக்கும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இதேபோல் இஸ்ரேல் நாட்டில் அதானி குழுமம் பல துறையில் முதலீடு செய்ய விரும்புகிறது, இதிலும் வெற்றிப்பெறுவோம் என நம்புவதாகத் தெரிவித்தார்.
திறன்
இதேபோல் ஹைஃபா துறைமுகத்தைச் சரியான முறையில் மேம்படுத்தி இந்தியா - இஸ்ரேல் மத்தியிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு அதானி குழுமத்திடம் திறன் உள்ளது எனவும் நவர் கிலோன் தெரிவித்தார்.
இந்தியா - இஸ்ரேல் FTA
இந்தியா - இஸ்ரேல் மத்தியில் ப்ரீ டிரேட் ஒப்பந்தம் (FTA) விஷயத்தில்,இரு நாடுகளும் விதிமுறை, கண்டிஷன்களை இறுதி செய்வதில் ஆர்வமாக உள்ளதாக ஸ்ரேல் தூதர் நவர் கிலோன் கூறினார். மேலும் இந்தியா பிராந்திய வல்லரசாக இருந்து உலகளாவிய வல்லரசு நாடாக மாறும் பாதையில் உள்ளது என்றும் இஸ்ரேலிய தூதர் தெரிவித்தார்.
Centres of Excellence திட்டம்
Centres of Excellence குறித்துப் பேசுகையில் இந்தியா - இஸ்ரேல் மத்தியிலான முழு இராஜதந்திர உறவுகள் நிறைவேற்றப்பட்டு 30 வருடம் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் ஹியானாவில் இஸ்ரேல் விவசாயத் துறைக்கான பிரத்தியேக Centres of Excellence அமைத்ததுள்ளது என்றும், 10க்கும் அதிகமான Centres of Excellence அமைக்கத் திட்டமிட்டு இருப்பதாக நவர் கிலோன் தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications